உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், ஜனவரி 06, 2010

விருத்தாசலம் ரயில்வே மேம்பால பணி மந்தம் : உலர் களமாக மாறி வரும் புறவழிச்சாலை

விருத்தாசலம் :

                     விருத்தாசலம் புறவழிச் சாலையில் ரயில்வே மேம்பால பணி மந்த கதியில் நடந்து வருவதால், பணி முடிந்த சாலை பகுதிகள் தற்போது விவசாயிகளின் நெற்களமாக மாறிவருகிறது.

                  விருத்தாசலம் நகரில் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலை குறைக்க "தமிழ்நாடு ரோடு செக் டார் ப்ராஜெக்ட்' மூலம் புறவழிச்சாலை அமைக்க திட்டமிடப்பட்டது. கடலூர் ரோட்டில் உள்ள பொன்னேரியில் இருந்து வேப்பூர் ரோட்டில் உள்ள மணலூர் வரை 9.1 கி.மீ., தூரத்திற்கு புறவழிசாலை 2010 ஜனவரிக்குள் அமைக்க முடிவு செய்யப் பட்டு அதற்காக 20 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப் பட்டது.பொன்னேரியில் இருந்து மணலூர் வரை அமைய உள்ள புறவழி சாலையில் மணிமுத்தாறும், ரயில் பாதையும் அமைந்துள்ளதால் அவற் றிற்கு மேலே மேம்பாலங்கள் அமைக்க திட்டமிடப்பட்டது. அதுபோல் சாலை அமைக்கும் இடங் களில் உள்ள விளைநிலங்களை கையகப்படுத்தவும் முடிவு செய்யப்பட்டு அதற்கான பூர்வாங்க பணிகள் கடந்த 2005 ம் ஆண்டு நவம்பர் மாதம் இறுதியில் துவங்கியது.

                 தற்போது பொன்னேரியில் இருந்து மணலூர் இடைப்பட்ட பகுதியில் சாலை அமைக்கும் பணி முழுவதும் முடிவடைந்து விட்டது. அதுபோல் மணிமுக்தா ஆற்று மேம்பால பணியும் முடிவடைந்து போக்குவரத்திற்கு தயாராக உள்ளது. ரயில்வே மேம்பாலம் அமைக்க 2.5 கோடி மதிப் பீட்டில் "இர்கான்' எனப்படும் "இந்தியன் ரயில்வே கன்ஸ்ட்ரக்ஷனிடம்' ஒப்படைத்து நான்கு ஆண்டுகளுக்கு மேலாகியும் பணி முடியாமல் மந்த நிலையில் நடந்து வருகிறது. இன்று வரை பாதி அளவு பணிகள் மட்டுமே நடந் துள்ளதால் புறவழி சாலை பணி முடிவடைவதில் தாமதம் ஏற்பட் டுள்ளது.இதனால் வேப்பூர், திட் டக்குடி, பெண்ணாடம் பகுதிகளில் இருந்து கடலூர் நோக்கி செல்லும் வாகனங்கள் நகரத்திற்குள் வந்து செல்லும் நிலையே உள்ளது.

                    குறிப்பாக மக்கள் நெருக்கம் அதிகமுள்ள பகுதியான கடைவீதி வழியாக கனரக வாகனங்கள் செல்லும்போது போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு தொடர்ந்து விபத்துகளும் நடந்து வருகிறது. குறிப்பாக இருசக்கர வாகன ஓட்டிகளும், நடந்து செல்பவர்களும் மிகுந்த சிரமத்திற்குள்ளாகின்றனர். கடந்த ஆறு மாதங்களுக்கு முன் கடைவீதி வழியாக சைக்கிளில் பள்ளிக்கு சென்ற மாணவி ஒருவர் போக்குவரத்து நெரிசலால் கனரக வாகனத்தில் சிக்கி இறந்தார். இவைத்தவிர தினசரி சிறு, சிறு விபத்துகள் நடப்பது தொடர்கதையாகி வருகிறது.புறவழிசாலை பயன் பாட்டிற்கு வராததால் பணி நிறைவு பெற்ற சாலைகளை விவசாயிகள் தானியங்கள் உலர வைப்பதற்கும், நெல் அடிக்கும் களமாகவும் பயன்படுத்தி வருகின்றனர்.

                     இதனால் சாலையில் சிறு சிறு குழிகள் ஏற்பட்டு சாலை பழுதாகும் நிலை உள்ளது. அதுபோல் நகர பகுதியை ஒட்டிய சில இடங்களில் பொதுமக்கள் சாலையில் மாடுகளை கட்டிவைத் தும், தங்கள் சொந்த பயன்பாட்டிற்கு பயன்படுத்துவதாலும் சாலை பழுதாகும் நிலை உள்ளது. வாகன போக்குவரத்து இல்லாததால் குடி பிரியர்களும் தங்கள் பங்கிற்கு இரவு நேரங்களில் புறவழிசாலையை பாராக மாற்றி வருகின்றனர்.தற்போது விருத்தாசலம்- வேப்பூர் சாலையில் ரயில்வே மேம்பால பணி தொடங்கப்பட்டுள்ளது. இதனால் விருத்தாசலம் - வேப்பூர் செல்லும் வாகனங்களும், வரும் வாகனங் களும் நகரத்திற்குள்ளே செல்லும் வகையில் மாற்று வழியில் விடப்பட் டுள்ளது. குறிப்பிட்ட கால கெடுவுக்குள் புறவழிசாலை பணி முடிந்திருந் தால் வேப்பூரில் இருந்து கடலூர் நோக்கி வரும் வாகனங்கள் புறவழிசாலை வழியாக சென்றிருக்கும்.

                தற்போது அதிக போக்குவரத்து நெரிசலுடன் நகரத்திற்குள் வந்து செல்லவேண்டிய நிலை உள்ளது.எனவே பொதுமக்கள், வாகன ஓட்டிகள் நலன் கருதியும், நகரத்தில் போக்குவரத்து நெரிசலை குறைப் பதோடு விபத்து மற்றும் உயிர் இழப்புகளை தடுத் திட ரயில்வே மேம்பால பணியினை விரைந்து முடிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முன் வர வேண்டும்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior