உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், ஜனவரி 06, 2010

கடலூரில் என்.எஸ்.எஸ்., என்.சி.சி., மாணவர்கள் விழிப்புணர்வு ஊர்வலம்



Top world news stories and headlines detail
கடலூர் :

              சாலை பாதுகாப்பு வார விழாவையொட்டி கடலூரில் நேற்று என்.எஸ்.எஸ்., என்.சி.சி., மாணவ,மாணவிகளின் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.போக்குவரத்து காவல் துறை மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் கடந்த 1ம் தேதி முதல் 7ம் தேதி வரை சாலை பாதுகாப்பு வார விழா கொண்டாடப்பட்டு வருகிறது. ஐந்தாம் நாளான நேற்று கடலூரில் என்.எஸ்.எஸ்., என்.சி.சி., மாணவ, மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.திருப்பாதிரிப்புலியூர் உழவர் சந்தையிலிருந்து டவுன் ஹால் வரை நடந்த ஊர்வலத்தில் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பாதுகைகளை ஏந்தி வந்தனர்.ஊர்வலத்தை டி.எஸ். பி.,ஸ்டாலின் துவக்கி வைத்தார். போக்குவரத்து இன்ஸ்பெக்டர் ராமதாஸ், சப் இன்ஸ் பெக்டர்கள் அன்பழகன், பிரகாஷ், என்.எஸ்.எஸ்., மாவட்ட தொடர்பு அலுவலர் திருமுகம், மரியசேவியர், ரவி, சசிகலா, தேவி, லில்லி கிறிஸ்டினாள், பரந்தாமன், ஆரோக்கியசாமி, பாலசுப்ரமணியன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior