உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், ஜனவரி 06, 2010

யானைக்கால் நோய் ரத்த சேகரிப்பு முகாம்

கடலூர் :

               கொசுக்களை ஒழிக்க தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. சிதம்பரம் அண்ணாமலை நகர் பேரூராட்சிக் குட்பட்ட பகுதியில் யானைக்கால் நோய் ஒழிப்பிற்காக மாவட்ட துணை இயக்குனர் மீரா உத்தரவின்பேரில் மாவட்ட மலேரியா அலுவலர் பாஸ் கர் தலைமையில் சிவக்கம் மருத்துவ அலுவலர் லலிதா, சுகாதார மேற்பார்வையாளர் ராஜகோபால், உணவு ஆய்வாளர் ரவிச்சந்திரன், சுகாதார ஆய்வாளர்கள் பழனிவேல், கருணாநிதி, கைலாஷ் இரவு நேர ரத்த சேகரிப்பு நடத்தினர்.முகாமை அண்ணாமலை நகர் பேரூராட்சி சேர்மன் கீதா துவக்கி வைத்தார். முகாமில் சேகரித்த 500 ரத்த மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப் பப்பட்டுள்ளது. இதில் யானைக்கால் நோய் அறிகுறிகள் தென்பட்டால் அவர்களுக்கு இலவச சிகிச்சை அளிக்கப்படும்.மேலும், பொது மக்கள் தங்கள் வீட்டை சுற்றி தண் ணீர் தேங்காமலும், கழிவறை காற்று போக்கியின் மீது வலை கட்டுவதன் மூலம் கொசு உற்பத்தியை குறைத்திட முடியும்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior