உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், ஜனவரி 06, 2010

தொழிலாளர் நலனுக்கு எதிராக அரசு செயல்படுகிறது : சி.ஐ.டி.யூ., பொதுச்செயலர் குற்றச்சாட்டு

கடலூர் :

              தொழிலாளர் நலனுக்கு எதிராக தமிழக அரசு செயல்பட்டு வருகிறது என்று சி.ஐ.டி.யூ., மாநில பொதுச்செயலர் சவுந்தர ராசன் கூறினார்.

கடலூர் மாநாட்டில் பங்கேற்ற அவர் கூறியதாவது:

               தமிழக அரசின் ஆதர வோடு முதலாளிகள், தொழிற்சங்க உரிமைகளை மறுத்து வருகின்றனர். தொழிற்சங்கங்கள் அமைக்கப்பட்டால் அதை அங்கீகரிப்பதற்கான சட் டத்திருத்தம் 1990ல் கொண்டு வரப்பட்டது. அதை இன்று வரை அமல்படுத் தவில்லை.தமிழகத்தில் ஒரு கோடி தொழிலாளர்கள் உள் ளனர். பெரிய ஜவுளி கடை கள், நகைக்கடைகள், "ஐடி' போன்ற நிறுவனங் களில் எட்டு மணி நேரம் அமல்படுத்த வேண்டும். முறைசாரா தொழிலாளர் கள் ஒரு கோடிக்கு மேல் உள்ளனர். அவர்களுக்கு அமைக் கப்படுகின்ற நலவாரியத் தில் சேர வருவாய் ஆய் வாளரிடம் சான்றிதழ் பெற வேண்டும் என அறிவித்துள்ளதை கைவிட வேண்டும்.அத்தியாவசிய பொருட் களின் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளது. மத்திய அரசு தன் வசம் வைத் துள்ள பெட்ரோல், டீசல் விலையை கூட உயர்த்திவிட்டது. எரிபொருளில் 35 சதவீதம் வரி உள்ளது.

                           இதையாவது அரசு கட்டுப்படுத்தலாம். ஆன்லைனில் அத்தியாவசிய பொருட்கள் வணிகம் செய்வதை தடை செய்ய வேண்டும். பருப்பு, எண் ணெய் போன்றவற்றை இறக்குமதி செய்ய வேண்டும்.மத்திய பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகள் விற்பனை செய்யப்படுகின்றன. அதில் வரும் தொகையை அரசு வருவாயாக கணக்கு காட்டுகிறது. தனியார் கம்பெனிக்கு தடையில்லா மின்சாரம், தண்ணீர் என வழங்கும் அரசு, தொழிலாளர் நலச் சட்டங்களை அமல்படுத்த அறிவுறுத்துவதில்லை. தொழிலாளர்களுக்கு சாதகமாக வரும் தீர்ப்பை எதிர்த்து இந்த அரசு அர்ப்பத்தனமாக அப்பீல் செய்யாது என சட்டசபையில் அறிவித்த முதல்வர் கருணாநிதி, இன்று தொழிலாளர்களுக்கு எதிராக அப்பீல் போயிருக் கிறார். தொழிலாளர் நலனுக்கு விரோதமாக இந்த அரசு போய்க் கொண்டிருக்கிறது என்றார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior