உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், ஜனவரி 06, 2010

தி.மு.க.,விற்கு உறுதுணையாக இருங்கள் அரசு விழாவில் அமைச்சர் வேண்டுகோள்

காட்டுமன்னார்கோவில் :

             மாவட்டத்தில் 3 லட் சத்து 35,486 பயனாளிகளுக்கு இலவச கலர் "டிவி', வழங்கியுள்ளதாக அமைச்சர் பன்னீர் செல்வம் பேசினார். காட்டுமன்னார்கோவில் அடுத்த ஆச்சாள்புரத்தில் ஊராட்சி அலுவலகம் திறப்பு, கீழகடம்பூர், ஆயங்குடி, கஞ்சன் கொள்ளை, கண்டமங்கலம், நாட்டார்மங்கலம், பழைஞ்சநல்லூர், வடக் குப்பாளையம் கிராமங்களில் 6401 பயனாளிகளுக்கு இலவச கலர் "டிவி' மற்றும் காட்டுமன்னார் கோவில் பேரூராட்சி பகுதியில் 489 பயனாளிகளுக்கு இலவச காஸ் அடுப்பு வழங்கும் விழா நடந்தது.கலெக்டர் சீத்தாராமன் தலைமை தாங்கினார்.

            ஊராட்சி அலுவலகத்தை திறந்து வைத்து பயனாளிகளுக்கு காஸ் இணைப்பு மற்றும் கலர் "டிவி'க் களை வழங்கி அமைச்சர் பன்னீர்செல் வம் பேசுகையில், மாவட்டத்தில் 66,700 பயனாளிகளுக்கு இலவச காஸ் அடுப்பும், மூன்று லட்சத்து 35 ஆயிரத்து 486 குடும்பங்களுக்கு இலவச கலர் "டிவி' வழங்கப்பட் டுள்ளது. முஸ்லிம் சமூக மக்களுக்கு 3.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டதால் முஸ்லிம் மாணவர் கள் மருத்துவம் மற்றும் பொறியியல் கல்லூரியில் சேர்ந்து படித்து வருகின்றனர். உங்களின் வாழ் வாதாரத்தை மேம்படுத்த திட்டங்களை செயல்படுத்தும் தி.மு.க., அரசுக்கு நீங்கள் உறுதுணையாக இருக்க வேண் டும் என பேசினார்.விழாவில் டி.ஆர்.ஓ., நடராஜன், ஒன்றிய சேர்மன்கள் மாமல்லன், முத்துபெருமாள், ஜெயச் சந்திரன் பங்கேற்றனர். தாசில்தார் வீரபாண்டியன் நன்றி கூறினார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior