உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், ஜனவரி 06, 2010

கடலூரில் இன்று போக்குவரத்து மாற்றம்

கடலூர் :

             சி.ஐ.டி.யூ., தொழிலாளர்கள் பேரணியையொட்டி கடலூரில் இன்று மாலை போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. இந்திய தொழிற் சங்க மையம் (சி.ஐ.டி.யூ) 11வது தமிழ் மாநில மூன்று நாள் மாநாடு கடலூரில் நேற்று முன்தினம் துவங்கியது. மாநாட் டின் இறுதிநாளான இன்று மாலை 4 மணிக்கு கடலூர் பாதிரிக்குப்பத் தில் துவங்கும் சி.ஐ. டி.யூ., தொழிலாளர்களின் பேரணி திருப்பாதிரிபுலியூர் லாரன்ஸ் ரோடு, பாரதி ரோடு வழியாக மஞ்சக்குப்பம் மைதானத்தை அடைகிறது.இதற்காக இன்று மாலை 3 மணி முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கடலூர் பஸ் நிலையத்திலிருந்து புதுச்சேரி மற்றும் நெல்லிக்குப்பம் செல் லும் பஸ்கள் ஜவான்பவன் வழியாக திருப்பிவிடப்படுகிறது.பேரணி துவங்கும் வரை திருவந்திபுரம் சாலையில் போக்குவரத்து சிறிது நேரம் நிறுத்தி வைக்கப்படுகிறது. இத்தகவலை டி.எஸ்.பி., ஸ்டாலின் கூறினார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior