உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், ஜனவரி 06, 2010

விருத்தாசலத்தில் சாலை பாதுகாப்பு வார விழா



Top world news stories and headlines detail
விருத்தாசலம் :

                 விருத்தாசலம் பஸ் நிலையத்தில் அரசு போக்குவரத்து கழகம் விழுப்புரம் கோட்டம் சார்பில் சாலை பாதுகாப்பு வார விழா நடந்தது.போக்குவரத்து கழக துணை மேலாளர் அன்பழகன் தலைமை தாங்கினார். கிளை மேலாளர்கள் ராஜேந்திரன், சிவக் குமார் முன்னிலை வகித்தனர். மோட்டார் வாகன ஆய்வாளர் ராஜேந்திரன் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கண்காட்சியை துவக்கி வைத்தார்.இன்ஸ்பெக்டர் பசுபதி பஸ் உள்ளிட்ட வாகனங்களின் முகப்பு விளக்கில் கருப்பு ஸ்டிக்கர் ஒட்டினார். பின்னர் பொதுமக்கள் உட்பட அனைவரும் சாலை பாதுகாப்பு உறுதிமொழி ஏற்றனர். போக்குவரத்து இன்ஸ்பெக்டர் ரவீந்திரன், ஓட்டுனர் ஆசிரியர் ஜான் போஸ்கோ உட்பட பலர் கலந்து கொண்டனர். பஸ் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு சிறப்பு பஸ்சை ஏராளமான பொதுமக்கள் பார்வையிட்டனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior