உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், ஜனவரி 06, 2010

அடிப்படை வசதிகள் இல்லாததால் ரேஷன் கார்டுகளை ஒப்படைக்க முடிவு

கடலூர் :

          அடிப்படை வசதிகள் செய்து தரவில்லையென்றால் ரேஷன் கார்டுகள், வாக்காளர் அடையாள அட்டைகளை மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைக்கும் நிலை ஏற்படும் என எச்சரித்துள்ளனர்.

                  இதுகுறித்து மந்தாரக்குப்பம் ஓம்சக்தி நகர் குடியிருப்போர் நல சங்கம் சார்பில் கெங்கை கொண்டான் பேரூரட்சி தலைவர் சக்திவேல் தலைமையில் 100க்கும் மேற்பட்டோர் கலெக்டரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:

                     மந்தாரக்குப்பம் பஸ் நிலையம் அருகே அமைந்துள்ள ஓம்சக்தி நகரில் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக 500 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களுக்கு அடிப்படை வசதிகளான தெருவிளக்கு, குடிநீர், வடிகால் அமைப்பு உள்ளிட்ட வசதிகள் இதுவரை செய்யப்படாமல் உள்ளது.இதுகுறித்து பல போராட் டங்கள் நடத்தியும் பலன் இல்லை. இதே நிலை நீடித்தால் வாழ்வதற்கு வழியில்லாதவர்கள் என்ற நிலையில் எங்களின் ரேஷன் கார்டுகள், வாக்காளர் அடையாள அட்டைகளை தங்களிடம் ஒப்படைப்பதை தவிர வேறு வழியில்லை.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior