உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், ஜனவரி 06, 2010

விழுப்புரம் - மயிலாடுதுறை அகல பாதையில் மூன்றாண்டுக்கு பின் சரக்கு ரயில் வெள்ளோட்டம்

கடலூர் :

                விழுப்புரம் - மயிலாடுதுறை அகல ரயில் பாதையில், சரக்கு ரயில் போக்குவரத்து நேற்று வெள்ளோட் டம் விடப்பட்டது.

                  விழுப்புரம் - மயிலாடுதுறை இடையே 122 கி.மீ., தூர மீட்டர் கேஜ் பாதை அகல பாதையாக மாற்றும் பணி, கடந்த 2006ம் ஆண்டு 280 கோடி ரூபாய் மதிப்பீட்டில் துவங்கியது. முதல் கட்டமாக சீர் காழி - மயிலாடுதுறை இடையே 22 கி.மீ., தூரம் பணிகள் முடிந்து, கடந்த ஆண்டு ஜன., 28ம் தேதி முதல், சரக்கு ரயில்கள் இயங்கி வருகிறது. ரண்டாம் கட்டமாக 48 கி.மீ., கடலூர் - விழுப்புரம் பாதை பணிகள் முடிந்து, கடந்த ஆண்டு மார்ச் 26ம் தேதி, கடலூர் - விழுப்புரம் ரயில்வே பாதையில், இலகு ரக இன் ஜின் சோதனை ஓட்டம் நடந்தது.மூன்றாம் கட்டமாக கடலூர் - சிதம்பரம் வரையிலான பாதை, பணிகள் முடிக்கப்பட்டது.இதையடுத்து, விழுப்புரத்திலிருந்து - மயிலாடுதுறைக்கு நேற்று காலை 7.40 மணிக்கு 3,632 டன் அரிசி ஏற்றிய, 41 பெட்டிகள் கொண்ட ரயில் ஒன்றும், அதே போல் காலை 7.35 மணிக்கு மயிலாடுதுறையிலிருந்து விழுப்புரத்திற்கு 3,630 டன் சர்க்கரை ஏற்றிய 40 பெட்டிகள் கொண்ட சரக்கு ரயிலும் வெள்ளோட்டமாகப் புறப்பட்டன.

                          இரண்டு ரயில்களும் 40 முதல் 50 கி.மீ., வேகத்தில் செல்லவும், குறிப்பிட்ட ஒரு சில இடங்களில் 20 முதல் 30 கி.மீ., வேகத்திலும், செல்ல டிரைவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. ழுப்புரத்திலிருந்து புறப்பட்ட சரக்கு ரயில் மதியம் 2 மணிக்கு மயிலாடுதுறைக்கும், மயிலாடுதுறையிலிருந்து புறப்பட்ட ரயில் 1.45 மணிக்கும் விழுப்புரத்தையும் சென்றடைந்தன.ரயில்வே பாதுகாப்பு ஆணையர் கே.ஜே.எஸ்.நாயுடு சோதனை செய்து, "பயணிகள் ரயில்கள் இயக்கப்படலாம்' என தரச் சான்று அளித்தவுடன், ரயில்கள் இயங்கும். இன்னும் முழுமை பெறாமல் உள்ள பணிகள் முடிவடைந்து, சோதனை செய்து தரச்சான்று வழங்க மூன்று முதல் ஐந்து மாதங்கள் ஆகும் என தெரிகிறது.

தாமதத்தை மறைக்க வெள்ளோட்டம் :

             சரக்கு ரயில் வெள்ளோட்டம் விடப்பட்டாலும், பணிகள் முழுமையாக முடித்து ரயில்வே நிர்வாகத்திடம் ஒப்படைக்கவில்லை. இதனால் அனைத்து இடங்களிலும் "பாயின்ட்'களை, ஊழியர்களே இயக்கினர். "கேட்'கள் முழுமையாக மூட முடியாமல், ஸ்டேஷனில் பணிபுரிபவர்கள் கேட் அருகே வந்து, சாலையில் போக்குவரத்தை நிறுத்தி, ரயிலை அனுப்பி வைத்தனர். பணி துவங்கி மூன்றாண்டுகளுக்கு மேல் ஆவதால், காலதாமதத்தை மறைக்க, அவசர அவசரமாக சரக்கு ரயில் இயக்கப்பட்டுள்ளது.சிக்னல்கள் வேலை செய்யாத பட்சத்திலும், எந்த நேரத்தில் ரயில் வரும் என தெரியாத நிலையில், ஆளில்லா ரயில்வே கேட்டை கடக்கும் போதிலும் விபத்துகள் நேர வாய்ப்புகள் உள்ளது.

              பெரும்பாலான ரயில்வே ஸ்டேஷன்களில், "லூப் லைன்' பணிகளே நிறைவடையாத நிலையில் உள்ளது.ஆர்.வி.என்.எல்., நிறுவனம் பணிகளை முழுமையாக முடித்து, ரயில்வே நிர்வாகத்திடம் ஒப்படைத்த பிறகே, பயணிகள் ரயில்கள் இயக்கப்படும் என, ரயில்வே அதிகாரிகள் வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior