உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், ஜனவரி 06, 2010

என்.எல்.சி.,க்கு எதிராக செயல்படுபவர்களை அனுமதிக்க முடியாது: சேர்மன் அன்சாரி

நெய்வேலி :

           என்.எல்.சி., நிறுவனத் தின் வளர்ச்சிக்கு எதிராக செயல்படுபவர்களை ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன் என சேர்மன் அன்சாரி பேசினார்.

             என்.எல்.சி., எஸ்.எம்., ஆபரேட்டர் சங்கத்தின் 40ம் ஆண்டு விழா நேற்று முன்தினம் நடந்தது. நெய்வேலி டவுன்ஷிப் 16ம் வட்டத்தில் உள்ள அமராவதி அரங்கில் நடந்தது. சங்க தலைவர் சந்திரன் தலைமை தாங்கினார். என்.எல்.சி., சுரங்க இயக்குனர் சுரேந்தர் மோகன், திட்ட இயக்குனர் கந்தசாமி, முதன்மை பொது மேலாளர்கள் குமாரசாமி, ராமலிங்கம் முன்னிலை வகித்தனர். பொது செயலாளர் சிவசண்முகநாதன் வரவேற் றார்.

விழாவில் என்.எல்.சி., சேர்மன் அன்சாரி பேசியதாவது:

                 கடும் சரிவிலிருந்து மீண்டு வந்துள்ள என்.எல்.சி., நிறுவனம் நல்ல மாற்றங்களை சந் திக்காவிட்டால் நமது நிறுவனத்தின் எதிர்காலமே இருண்டு போய்விடும். நாம் நமது உழைப்பை அதிகப்படுத்தினால் மட் டுமே என்.எல்.சி., பல தலைமுறைகளுக்கு பிரகாசிக்க முடியும். இதுவரை பிற நிறுவனங் களை ஒப்பிட்டு நமது நிறுவனத்தை வளர்க்கும் முயற்சியில் ஈடுபட்டோம். இனி என்.எல்.சி.,யை ஒப்பிட்டு பிற நிறுவனங்கள் வளர்ச்சி பாதையில் செல்ல முயல வேண்டும்.சர்வதேச அளவில் சாதனை புரிய தயாராகிவிட்ட என்.எல்.சி., நிறுவனத்தை அசைத்து பார்க்க சில தீய சக்திகள் முயலுகின்றன. அதனை ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன். நமது நிறுவனத்தின் வளர்ச்சிக்கு எதிராக செயல்படுபவர் களை நாம் அனைவரும் இணைந்து விரட்டியடிக்க வேண்டும்.இவ்வாறு சேர்மன் பேசினார். சங்க பொரு ளாளர் சீனிவாசன் நன்றி கூறினார்.விழாவில் நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் தொழிற்சங்கங்களின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior