உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், ஜனவரி 06, 2010

மண்டபத்தில் புறக்காவல் நிலையம் மீண்டும் திறக்க பொதுமக்கள் எதிர்பார்ப்பு

கிள்ளை :

             சிதம்பரம் அருகே மண்டபத்தில் மூடப்பட்ட புறக்காவல் நிலையத்தை மீண்டும் திறக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர் பார்க்கின்றனர். சிதம்பரம் அருகே சி.முட்லூர் அரசு கல்லூரி மற்றும் சுற்றியுள்ள கிராமப்பகுதிகளில் ஏற்படும் பிரச்னைகளை கட்டுபடுத்த கிள்ளை போலீஸ் நிலையத்தில் இருந்து போலீசார் அவசரத்திற்கு வர முடியாத நிலை இருந் தது. அதனையொட்டி அப் போதைய எம்.எல்.ஏ., அருள் முயற்சியினால் கடந்த 2006ம் ஆண்டு மண்டபத்தில் புறக்காவல் நிலையம் திறக்கப்பட்டது. இதனால் சுற்றுவட்டாரத் தில் சிறு பிரச்னை என்றாலும் உடனுக்குடன் தீர்வு காணப்பட்டதால் மக்கள் நிம்மதியாக இருந்தனர்.

           இந்நிலையில் புறக்காவல் நிலையம் மூடப்பட்டது. இதனால் இப்பகுதிகளில் மீண்டும் பிரச்னைகளோடு, திருட்டு சம்பவங்களும் அதிகரித்து வருகின்றன.கிள்ளை போலீஸ் ஸ்டேஷனில் போலீசார் பற்றாக்குறையால் சி.முட்லூர் பகுதியில் நிலவும் பிரச்சனைகளுக்கு தீர்வு காணமுடியாமல் உள்ளது. இதனைத் தவிர்த்திட மண்டபத்தில் மீண்டும் புறக்காவல் நிலையம் திறக்க எஸ்.பி., நடவடிக்கை எடுக்க வேண்டும்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior