உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், ஜனவரி 06, 2010

'டீச்சிங்' பயிற்சி மாணவர்களிடம் நன்கொடை நடவடிக்கை கோரி கலெக்டருக்கு கடிதம்

விருத்தாசலம் :

            "டீச்சிங்' பயிற்சி பெரும் மாணவர்களிடம் நன்கொடை கேட்கும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐந்தாவது தூண் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

             இதுகுறித்து ஐந்தாவது தூண் இந்தியா அமைப்பின் மாவட்ட செயலாளர் சந்தானமூர்த்தி கலெக்டர் மற்றும் சி.இ.ஓ., க்கு அனுப்பியுள்ள கடிதம்:

                 கடலூர் மாவட்டத்தில் ஆசிரியர் பயிற்சி பள்ளியில் படித்து வரும் மாணவ- மாணவிகளுக்கு மாவட்டத்தில் உள்ள ஏனைய பள்ளிகளில் பணி தொடர்பான "டீச்சிங்' பயிற்சி அளிக்கப்படுகிறது. பயிற்சி பெரும் மாணவர்களுக்கு அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் சான்றிதழ் வழங்க வேண்டும்.அவ்வாறு சான்றிதழ் வழங்க ரூபாய் 500 முதல் 1000 வரையும், மேலும் பெஞ்ச், நாற்காலி உள்ளிட்ட பொருட்களை நன் கொடையாக வாங்கி தருமாறு கட்டாயப்படுத்துவதாக எங்கள் அமைப்பிற்கு தகவல் கிடைத்துள்ளது.

                  எனவே கலெக்டர் அவர்கள் உடனடி நடவடிக்கை எடுத்து எந்த ஒரு நன்கொடையும் இல்லாமல் மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மாணவர்கள் பயிற்சி பெரும் பள்ளிகளில் விசாரணை செய்து தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior