உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், ஜனவரி 06, 2010

சேத்தியாத்தோப்பை தலைமையிடமாக தனி தாலுகா : வியாபாரிகள் சங்க செயலாளர் முதல்வருக்கு மனு

சேத்தியத்தோப்பு :

               சேத்தியாத்தோப்பை தலைமையிடமாக கொண்டு தனி தாலுகா அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சேத்தியாத்தோப்பு வியாபாரிகள் சங்க செயலாளர் மகாராஜன் முதல்வருக்கு அனுப்பியுள்ள மனு:

                  மாவட்டத்தில் சமீபத்தில் குறிஞ்சிப்பாடியை தலைமையிடமாக கொண்டு புதிய தாலுகா உருவாக்கப் பட் டுள்ளது வரவேற்கத்தக்கது. அதேபோன்று சேத்தியாத்தோப்பிற்கு அருகே உள்ள சிதம்பரம் தாலுக்காவின் 20 கிராமங்கள், காட்டுமன்னார்கோவில் தாலுகாவின் 30 கிராமங்கள், ஸ்ரீமுஷ்ணம் பேரூராட்சி, விருத்தாசலம் தாலுகாவில் உள்ள 15 கிராமங்களை சேர்ந்த மக்கள் தாலுகா அலுவலகங்களுக்கு செல்ல நீண்ட தூர பயணம் மேற்கொள்ள வேண்டியுள்ளது.

            பல கிராம மக்கள் மூன்று பஸ் மாறி சென்றால் தான் தாலுகா அலுவலகத்தையே அடைய முடியும் என்கிற நிலை உள்ளது. இதனால் இப்பகுதி மக்களின் பண விரயம் அதிகரித்து நேரம் வீணாகி வருகிறது. எனவே சேத்தியாத்தோப்பை தலைமையிடமாக கொண்டு தனி தாலுகா அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior