உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், மார்ச் 04, 2010

முன்விரோத தகராறில் 7 பேரை தாக்கிய இருவர் கைது

கடலூர்: 

                     முன் விரோதத்தில் 7 பேரை தாக்கிய வழக்கில் இருவர் கைது செய்யப் பட்டனர். கடலூர் வண்ணாரப்பாளையத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீதர் (21). இவரை அதே பகுதியைச் சேர்ந்த கார்த்திகேயன் என்பவர் தனது உறவினர் முருகன் டைலர் கடைக்கு தீவைத் துவிட்டதாக தாக்கினார். இது குறித்து ஸ்ரீதர் தேவனாம்பட்டினம் போலீசில் புகார் செய்தார்.  இதனை அறிந்த கார்த்திகேயன், மற்றும் அவரது ஆதரவாளர்கள் சேர்ந்து ஸ்ரீதர், அவரது ஆதரவாளர்களை தாக்கினர். இதில் காயமடைந்த ஸ்ரீதர், ராஜ்குமார், சக்திவேல், தமிழரசன், ருக்குமணி, வினோத், பானு ஆகியோர் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். தேவனாம்பட்டினம் போலீசார் வழக்கு பதிந்து கார்த்திகேயன்(31), சாரங் கன்(33) இருவரையும் கைது செய்தனர். மேலும் ஆனந்த், சரவணன், சதீஷ் குமார், சசி, முத்து தேடி வருகின்றனர்.




0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior