உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், மார்ச் 04, 2010

ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் பொதுமக்கள் கலெக்டரிடம் மனு

கடலூர்:

                    சுடுகாட்டுபாதை மற் றும் அய்யனார் கோவில் இடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி சுய உதவிக்குழு பெண்கள் கலெக்டரிடம் மனு கொடுத்துள்ளனர்.

இது குறித்து பெரிய சோழவல்லி பொதுமக்கள் மற்றும் மகளிர் சுய உதவிக் குழுவினர் கலெக்டரிடம் கொடுத்துள்ள மனு:

                      நெல்லிக்குப்பம் பெரிய சோழவல்லி கிராம மக்களுக்கு பொதுவான சுடுகாட்டு பாதை, அய்யனார் கோவிலுக்கு செல்லும் பாதைகள் தனி நபர்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இது குறித்து நகராட்சி சேர்மன், தாசில்தாரிடம் புகார் செய்தோம். ஆனால் நகராட்சி சர்வேயர் ஒருதலைபட்சமாக நடந்துகொண்டதால், அளக்க வேண்டும் என நிறுத்திவிட்டோம். எனவே எங்கள் ஊருக்கு சொந்தமான சுடுகாட்டுப்பாதை, அய்யனார்கோவில் பாதை ஆக்கிரமிப்புகளை மாவட்ட நிர்வாகம் அகற்றி , பொதுவான இடத்தை அளந்து கொடுக்க வேண்டும்.



0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior