உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், மார்ச் 04, 2010

பாலம் கட்டுமான பணி எம்.எல்.ஏ., ஆய்வு

நடுவீரப்பட்டு:

                  நடுவீரப்பட்டில் நடைபெற்று வரும் பாலம் கட் டுமான பணியை எம்.எல்.ஏ., பார்வையிட்டார். நடுவீரப்பட்டு - சி.என்.பாளையம் இடையே கட்டப்பட்டு வரும் உயர் மட்ட பாலத்தை எம்.எல். ஏ., சபா ராஜேந்திரன் பார் வையிட்டு, தற்போது நடந்து வரும் பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.பாலம் கட்டி முடித்ததும், இந்த வழியாக நடுவீரப்பட்டிலிருந்து சி.என்.பாளையம் கடைவீதி வழியாக அரசு பஸ் இயக்க போக்குவரத்து அதிகாரிகள் தயாராக உள்ளனர். அதனால் கடை வீதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை வியாபாரிகளே முன்வந்து அகற்றிக் கொள்ள வேண் டும் என்றார். அதற்கு வியாபாரிகள் எந்த அளவு ஆக்கிரமிப்பு உள்ளது என அதிகாரிகள் கூறினால், அதனை அகற்றிக் கொடுக்க தயாராக உள்ளதாக வியாபாரிகள் கூறினர். மாவட்ட கவுன்சிலர் ஸ்ரீ மதி, ஒன்றிய கவுன்சிலர்கள் தட்சணாமூர்த்தி, கந்தசாமி, ஒன்றிய செயலாளர் ஜெயபால், முன்னாள் கவுன்சிலர் ராஜேந்திரன் மற்றும் வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் உடனிருந்தனர்.



0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior