உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், மார்ச் 04, 2010

கல்லூரி மாணவர்கள் திடீர் மறியல் போராட்டம்

கடலூர்:

                     ​ கடலூர் பெரியார் அரசு கலைக் கல்லூரி மாணவர்களில் ஒரு பிரிவினர் புதன்கிழமை திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.​ ​​ பெரியார் அரசு கலைக் கல்லூரியில் புதன்கிழமை காலை 8.45 மணிக்கு சில மாணவர்கள் கல்லூரி வாயில் அருகே நின்றிருந்தனர்.​ ​ அப்போது தாவரவியல் பேராசிரியர் மோட்டார் சைக்கிளில் கல்லூரிக்கு வந்தார்.​ அப்போது அங்கு நின்றிருந்த 3-ம் ஆண்டு மாணவர் விநோத்தின் கால் ​மீது மோட்டார் சைக்கிள் டயர் பதிந்து விட்டதாகக் கூறப்படுகிறது.​ ​ ​​ இதனால் மாணவர்களுக்கும் பேராசிரியருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.​ ​இதையடுத்து பேராசிரியர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கோரி,​​ கல்லூரி மாணவர்களில் ஒரு பிரிவினர் கல்லூரி வாயிலில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.​ ஒரு மணி நேரத்துக்கும் மேலாக இந்தப் போராட்டம் நீடித்தது.​  பின்னர் கல்லூரி முதல்வர் வந்து பேச்சு நடத்தி மாணவர்களைக் கலைந்து போகச் செய்தார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior