உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், மார்ச் 04, 2010

மெகா பள்ளங்களால் விபத்துகள் அதிகரிப்பு

பண்ருட்டி:

                   பண்ருட்டி - வீரப்பெருமாநல்லூர் சாலையில் உள்ள மெகா பள்ளங்களால் விபத்துகள் அதிகரித்து வருகிறது. கடலூர்-சித்தூர் சாலையில் பண்ருட்டி நான்கு முனை சந்திப்பு முதல் வீரப்பெருமாநல்லூர் வரையிலான 13 கிலோ மீட்டர் சாலை குண்டும் குழியுமாக உள்ளது.

                     கடந்த 2008ம் ஆண்டு பெய்த மழையின் போது குண்டும் குழியுமாக இருந்த பகுதிகளை நெடுஞ்சாலைத்துறையினர் பெயரளவிற்கு "பேட்ஜ் ஒர்க்' செய்தனர். ஆனால் முழுமையாக பாதித்த இடங்களை சீரமைக்கவில்லை. கடந்த பருவ மழையின் போது சாலையின் பல பகுதிகளில் மெகா பள்ளங்கள் உருவானது. மேலும் சாலையில் உள்ள "சிப்ஸ்' பெயர்ந்தது. ஆனால் நெடுஞ்சாலைத்துறையினர் நிதி வரவில்லை என கூறி வழிநெடுக உள்ள பள்ளங்களை "பேட்ஜ் ஒர்க்' கூட செய்யவில்லை.இந்த சாலையில் உள்ள மெகா பள்ளங்களால் இவ்வழியே வரும் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். இரவு நேரங்களில் இரு சக்கர வாகனங்களில் வருபவர்கள் பள்ளங்களில் விழுந்து விபத்தில் சிக்குவது அதிகரித்து வருகிறது.பெரும் விபத்து ஏற்படும் முன்பாக இந்த சாலையை சீரமைக்க நெடுஞ்சாலை துறையினர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.



0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior