உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், மார்ச் 04, 2010

சிதம்பரம் பகுதியில்மின் தடை நேரம் மாற்றம்


சிதம்பரம்:

               சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் பகுதிகளில் மின் தடை நேரம் மாற்றப்பட்டுள்ளது.

இது குறித்து சிதம்பரம் கோட்ட மின் வாரிய செயற்பொறியாளர் செல்வசேகர் விடுத்துள்ள செய்திகுறிப்பு:

                  சிதம்பரம் துணை மின் நிலையத்தில் சிதம்பரம் நகரம்,அம்மாப்பேட்டை மற்றும் மணலூர் பகுதியில் காலை 8 மணிமுதல் 10 மணி வரையும், மாரியப்பா நகர், அண்ணாமலைநகர் பகுதியில் மாலை 4 முதல் 6மணி வரையும், பி.முட்லூர் துணை மின் நிலையத்தில் புவனகிரி, கீரப்பாளையம், பரங்கிப்பேட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் மாலை 4மணி முதல் 6மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது. காட்டுமன்னார்கோவில் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட காட்டுமன்னார்கோவில் நகரம், லால்பேட்டை பகுதிகள் சேத்தியாத் தோப்பு துணை மின் நிலையம்,சேத்தியாத் தோப்பு நகரம் மற்றும் சுற்றுப்பகுதிகளில் பகல் 2 மணி முதல் 4 மணி வரையும், ஸ்ரீமுஷ்ணம் துணை மின் நிலைய மின் வினியோக பகுதிகளில் காலை 8 மணி முதல் 10 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது. இவ்வாறு அந்த செய்திகுறிப்பில் கூறப்பட்டுள்ளது.



0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior