உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், மார்ச் 04, 2010

குழந்தைகளுக்கு பெற்றோர் வழி காட்டியாக இருக்க வேண்டும் : என்.எல்.சி., சேர்மன்'அட்வைஸ்'

நெய்வேலி:

                        பெற்றோர்கள் தங்களது எண்ணங்களை குழந்தைகள் மீது திணிப்பது தவறு என என்.எல்.சி., சேர்மன் அன்சாரி பேசினார். தமிழ்நாடு அறிவியல் மையம் சார்பில் நெய்வேலி லிக்னைட் அரங்கில் தேசிய அறிவியல் தினம் நடந்தது. அறிவியல் மற்றும் தொழில் நட்பத் தகவல் தொடர்பு தேசியக் குழுவின் இணை செயலாளர் ராமலிங்கம் தலைமை தாங்கினார். நெய்வேலி மைய செயலாளர் தாமோதரன் வரவேற்றார். பள்ளி, மாணவர்களின் அறிவியல் கண் காட்சி அரங்கை என். எல்.சி., கல்வித் துறை பொது மேலாளர் சுகுமார் திறந்து வைத்தார்.

                       தேசிய அறிவியல் தின போட்டிகளில் வெற்றி பெற்றவர்களக்கு பரிசு மற் றும் சான்றிதழும், அறிவியல் கண்காட்சியில் சிறந்த காட்சி பொருளை வடிவமைத்திருந்த மாணவர்களுக்கு சர்.சி.வி. ராமன், சுபாஷ் சந்திர போஸ் மற்றும் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் விருதுகளை வழங்கிய என்.எல்.சி., சேர்மன் அன்சாரி பேசியதாவது:உலகில் நாம் பார்ப்பது அனைத்தும் அறிவியல் கோட்பாடுகளின் படியே நடந்து வருகின்றன. நம் நாடு வெள்ளையர்கள் ஆட்சியின் கீழ் இருந்த நேரத்தில் சுதந்திர போராட்டம் நடந்து கொண்டிருந்த சூழலில் சர்.சி.வி. ராமன் தனது மிகச் சிறந்த கண்டுபிடிப்பால் நோபல் பரிசு பெற்று நமது நாட்டிற்கு பெருமை தேடி தந்தார்.

                     ஒவ்வொரு குழந்தைக்கும் தனித் திறமைகள் உள்ளன. அதனை உணர்ந்து பெற் றோர்கள் தங்களது எதிர் பார்ப்புகளை அமைத்து கொள்ள வேண்டும். தங்களின் ஆசைகளை குழந்தைகள் மீது திணிப்பது தவறு. 16 வயதிற்குள் நடக்கும் சம்பவங்கள் குழந்தைகளின் மனதில் வெகு ஆழமாக பதிந்து விடுகின்றன. அதனால் அத்தருணம் வரை பெற்றோர்கள் அவர் களுக்கு சிறந்த முன்மாதிரியாக வழி காட்ட வேண்டும். அதனை விடுத்து, தங்களது எதிர்கால கனவுகளை நிறைவேற்றும் வகையில் குழந்தைகளை வளர்க்கக்கூடாது.இவ்வாறு அன்சாரி பேசினார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநில செயற்குழு உறுப்பினர் நாராயணன், நெய்வேலி மையத்தின் தலைவர் செல்வராஜ், ராஜகோபால், ரவீந்திரன் ஆகியோர் செய்திருந்தனர்.



0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior