உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், மார்ச் 04, 2010

மக்கள் தொகை கணக்கெடுப்புசெயல்விளக்க பயிற்சி முகாம்

திட்டக்குடி:

                     திட்டக்குடி தாலுகாவில் மக்கள் தொகை கணக்கெடுப்பு குறித்து செயல்விளக்க பயிற்சி நடந்தது. திட்டக்குடி தாலுகாவில் 2011ம் ஆண்டிற்கான மக்கள் தொகை கணக்கெடுப்பு குறித்து பவர் பாய்ண்ட் செயல் விளக்க பயிற்சி, இடைச்செருவாய் வட்டார வளமையத்தில் நடந்தது. இதில் தாலுகா அலுவலக ஊழியர்கள், பேரூராட்சி ஊழியர்கள் பங்கேற்றனர். பயிற் சிக்கு தாசில்தார் கண்ணன் தலைமை தாங்கினார். தேர்தல்துறை தனி தாசில்தார் மெகருனிசா, உதவியாளர் கிருஷ்ணமூர்த்தி முன்னிலை வகித்தனர். மங்களூர் ஒன்றிய எஸ்.எஸ்.ஏ., மேற் பார்வையாளர் முருகேசன் துவக்கி வைத்தார். மக்கள் தொகை கணக்கெடுப்பு பிரிவு மேற்பார்வையாளர் சென்னை நடராஜன் பவர்பாய்ண்ட் மூலம் செயல் விளக்க பயிற்சியளித்தார். இதில் பேரூராட்சி உதவியாளர்கள் கிருஷ்ணமூர்த்தி, ஊர்காவலன், வி.ஏ.ஓ., பாலகிருஷ் ணன், ஆசிரிய பயிற்றுநர்கள் மங்களூர் மணிகண்டன், நல்லூர் தமிழ்வேந்தன், விருத்தாசலம் அய்யப்பன் பங்கேற்றனர்.ஊராட்சி தலைவர் ஜெயமணி நன்றி கூறினார்.


0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior