உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், மார்ச் 04, 2010

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் மாணவர்களுக்கு தனித்திறன் போட்டிகள்

புவனகிரி:

                       புவனகிரியில் பள்ளி மாணவர்களுக்கிடையே நடந்த தனித்திறன் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.

                       புவனகிரி கள்ளிக்காட்டு தெரு ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் தமிழ் நாடு அறிவியல் இயக்கத்தின் மூலம் பள்ளி மாணவர்களுக்கடையே மாவட்ட அளவில் தனித்திறன் போட்டிகள் நடத்தப் பட்டன. நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியர் சீத்தாலட்சுமி தலைமை தாங்கினார். கவுன்சிலர் புஷ்பரேகா சுதாகர் முன்னிலை வகித்தார். அறிவியல் இயக்க கிளை தலைவர் அறிவழகன் வரவேற்றார். மாவட்ட துணைச் செயலாளர் சிகாமணி துவக்கி வைத்தார். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுத்தொகை மற்றும் சான்றிதழ்களை முன்னாள் எம்.எல்.ஏ., சரவணன் வழங்கினார். உதவி தொடக்க கல்வி அலுவலர் சவரிமுத்து, கூடுதல் உதவி தொடக்ககல்வி அலுவலர் பிரான்சிஸ் ஜெயராஜ், வட்டார வள மைய மேற்பார்வையாளர் கலைச்செல்வன் பங்கேற்றனர். செயலாளர் பாலமுருகன் நன்றி கூறினார்.





0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior