உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், மார்ச் 04, 2010

மக்காசோளம் கொள்முதலில் முறைகேடுவியாபாரி, புரோக்கர்கள் சிறைபிடிப்பு

ராமநத்தம்:

                   விவசாயிகளிடம் மக்காசோளம் கொள்முதல் செய்வதில் முறைகேடு செய்த வியாபாரி மற்றும் புரோக்கரை கிராம மக்கள் சிறை பிடித்தனர். ராமநத்தம் அடுத்த அதர்நத்தம் கிராமத்தில் அறுவடை செய்யப்படும் மக்காச்சோளங்களை உள் ளூர் புரோக்கர்கள் மூலம் கள்ளக்குறிச்சி, ஆத்தூர் பகுதி வியாபாரிகள் கொள் முதல் செய்து வருகின் றனர். 100 கிலோ மூட்டை ஒன்று 850 ரூபாய் வரை விற்பனையாகிறது.

                            நேற்று முன்தினம் மதியம் கள்ளக்குறிச்சி வியாபாரி நல்லதம்பி, அதர்நத்தத்தை சேர்ந்த புரோக்கர் மூலம் பச் சையம்மாள் என்பவரிடம் 15 மூட்டை மக்காச்சோளம் வாங்கினார். அப்போது தராசில் மோசடி செய்து, மூட்டைக்கு 9 கிலோ கூடுதலாக மக்காச்சோளம் எடுப்பது தெரியவந்தது. ஆத்திரமடைந்த அப்பகுதியை சேர்ந்த பா.ம.க., பிரமுகர்கள் கோபி, வேல்முருகன் மற்றும் கிராம மக்கள் கள்ளக்குறிச்சி வியாபாரி நல்லதம்பி, புரோக்கர் ராஜேந்திரன், லாரி டிரைவர் ஆனந்தனை சிறைபிடித்தனர். தகவலறிந்த ராமநத்தம் சப் இன்ஸ்பெக்டர் அரியபுத்திரன் மற்றும் போலீசார் விரைந்து சென்று கிராம மக்களை சமாதானம் செய்து, சிறை பிடிக்கப்பட்ட மூவரையும் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து வந்து விசாரித்து வருகின்றனர்.



0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior