உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், மார்ச் 04, 2010

நந்தவனத்தில் குடியேறும் போராட்டம் சமாதான கூட்டத்தில் கைவிட முடிவு

விருத்தாசலம்:

                     விருத்தாசலத்தில் நேற்று நடைபெற இருந்த கோவில் நந்தவனத்தில் குடியேறும் போராட்டம் சமாதான கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவால் கைவிடப்பட்டது. விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவில் முன்பு கோவிலுக்கு சொந்தமான நந்தவன இடம் உள்ளது.
                   
                                 இந்த இடத்தில் உள்ள ஆக்கிரமிப்பால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுவதாகவும், ஆக்கிரமிப்பை அகற்றி அங்கு வாகன நிறுத்தம் அமைக்க கோவில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி நகர வாழ் மக்கள் மற்றும் வட்டார மக்கள் சார்பில் நேற்று (3 ம் தேதி) கோவில் நந்தவனத்தில் குடியேறும் போராட்டம் நடத்துவது என அறிவித்திருந்தனர்.இதையடுத்து நேற்று காலை தாசில்தார் ஜெயராமன் தலைமையில் தாலுகா அலுவலகத்தில் சமாதான பேச்சுவார்த்தை நடந்தது. சேர்மன் முருகன், கவுன்சிலர் பாலகிருஷ்ணன், கோவில் செயல் அலுவலர் ராஜாசரவணகுமார், சப் இன்ஸ் பெக்டர் கண்மணிசுப்பு மற்றும் வியாபாரிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.கூட்டத்தில் கோவில் செயல் அலுவலர் ராஜாசரவணகுமார் உயர் அதிகாரிகளிடம் அனுமதி வாங்கி ஆக்கிரமிப்புகளை அகற்றி, வாகன நிறுத்தம் அமைக்கப்படும் எனவும், அதற்கு ஒரு மாதம் கால அவகாசம் வேண்டும் என கேட்டார். இதை ஏற்று நேற்று நடைபெற இருந்த போராட்டம் கைவிடப் பட்டது.



0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior