உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், மார்ச் 04, 2010

அதிகாரிகளின் சமரச முயற்சியால் உண்ணாவிரத போராட்டம் ஒத்திவைப்பு


திட்டக்குடி:

                  திட்டக்குடி பேரூராட்சி அலுவலகம் முன்பு நடைபெற இருந்த தொடர் உண்ணாவிரத போராட்டம் அதிகாரிகளின் சமரச முயற்சியால் ஒத்திவைக்கப்பட்டது. திட்டக்குடி பேரூராட்சி 5வது வார்டு கவுன்சிலர் செந்தில் மற்றும் பொதுமக்கள் சார்பில், 5வது வார்டில் உள்ள ரேஷன் கடைக்கு சொந்த கட்டடம் கட்டவேண்டும். கொசு மருந்து அடிக்க வேண்டும்.

                       திட்டக்குடியில் உழவர் சந்தை துவங்க வேண்டும். அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நீக்கப்பட்ட என்.சி.சி., பிரிவிவை மீண்டும் துவங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 21 கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று காலை பேரூராட்சி அலுவலகம் முன்பாக தொடர் உண்ணாவிரத போராட்டம் அறிவிக்கப்பட்டது.இதனையடுத்து நேற்று முன்தினம் மாலை தாசில்தார் கண்ணன் தலைமையில், துணை தாசில்தார் பாலு, வார்டு கவுன்சிலர் செந்தில் மற் றும் போராட்டக்குழுவினர் முன்னிலையில் அமைதி கூட்டம் நடந்தது. இதில் வரும் 31ம் தேதி அனைத்துத்துறை அலுவலர்களுடன் மீண்டும் அமைதிக்குழு கூட்டம் நடத்துவது என்றும், அதற்குள் போதிய குறைகளை நிறைவேற்றுவதாக தாசில்தார் தெரிவித்தார். இதனையேற்று தொடர் உண்ணாவிரத போராட்டம் ஒத்திவைக்கப்பட்டது.



0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior