உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், மார்ச் 04, 2010

வீட்டு உபயோக மின் இணைப்பை தவறாக பயன்படுத்தினால் சிறை

கடலூர்:

                          வீட்டு உபயோக மின்சாரத்தை வேறு பயன்பாட்டிற்கு பயன்படுத்தினால் அபராதம் மற்றும் சிறை தண்டனை விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

இது குறித்து கடலூர் மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் ரவிராம் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

                  வீட்டு உபயோகத்திற்கு வழங்கபடும் மின்சாரம் அந்த குறிப்பிட்ட வீட்டு உபயோகத்திற்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும்.  வணிக பயன் மற்றும் தொழில் சாலைக்கோ பயன்படுத்தினால் மின் இணைப்பு துண்டிக்கப்படுவதுடன், அபராதம் மற்றும் சிறை தண்டனை விதிக்கப்படும். எந்த உபயோகத்திற்கு பெறப்பட்டதோ அது தவிர வேறு உபயோகத்திற்கு பயன்படுத்தினால் மின் திருட்டாக கருதி அபராதம் மற்றும் சிறை தண்டனை வழங்கப்படும்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட் டுள்ளது.



0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior