உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், மார்ச் 04, 2010

நவரைப் பட்ட நெல் சாகுபடிக்கு ​ வேளாண்துறை ஆலோசனை

கடலூர்:

                    நவரைப் பட்ட நெல் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு கீழ்காணும் ஆலோசனைகளை கடலூர் மாவட்ட வேளாண்துறை புதன்கிழமை அறிவித்தது.​ ​ ​​ 

இதுதொடர்பாக வேளாண் இணை இயக்குநர் ச.இளங்கோவன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:​ ​​

                    ​ கடலூர் மாவட்டத்தில் நவரைப்பட்ட நெல் உற்பத்தியைப் பெருக்கும் வகையில்,​​ தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டத்தில் மானிய விலையில் சிங்க் சல்பேட் உரம் விவசாயிகளுக்கு வேளாண் துறைமூலம் வழங்கப்படுகிறது.​ ​ நவரைப் பட்ட நெல் பயிருக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு 25 கிலோ சிங்க் சல்பேட் உரத்துடன்,​​ 50 கிலோ மணல் கலந்து,​​ ந ன்கு சமப்படுத்தப்பட்ட வயலில்,​​ நாற்று நடுமுன் ஒரே சீராக இடவேண்டும்.​​ ​ நவரைப் பட்ட நெல் சாகுபடி விவசாயிகள் தங்கள் பகுதி வேளாண்துறை அலுவலர்களை அணுகி சிங்க் சல்பேட் உரத்தை மானிய விலையில் பெற்று பயன் அடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்றும் செய்தி குறிப்பு தெரிவிக்கிறது.



0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior