உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஏப்ரல் 08, 2010

தீ விபத்து: 14 பேர் மீது வழக்கு

 சிதம்பரம்: 

                     சிதம்பரத்தில் 42 கொட்டகைள் தீ பிடித்து எரிந்தது தொடர்பாக ம.தி.மு.க., பிரமுகர் உள்ளிட்ட 14 பேர் மீது போலீசார் வழக்குப்பதிந்தனர். சிதம்பரம் சி.கொத்தங்குடி ஊராட்சிக்குட்பட்ட கதிர்வேல் நகரில் ஒரு ஏக்கர் புறம்போக்கு இடம் உள்ளது. ஒரு சிலர் அந்த இடத்தில் திடீரென கொட்டகை அமைத்தனர். நேற்று முன்தினம் நள்ளிரவு அந்த கொட்டகைகள் திடீர் என மர்மமான முறையில் தீப்பிடித்து எரிந்தது. 42 கொட்டகைகள் முழுவதுமாக எரிந்து சாம்பலானது. இதுகுறித்து பாரதிதாசன் என்பவர் கொடுத்த புகாரில் 'முன்விரோதம் காரணமாக அந்த இடத்தை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்த ம.தி.மு.க., பிரமுகர் பெருமாள் மற்றும் சரவணன், மணி, செல்வம் ஆகியோர் உள்ளிட்ட 14 பேர் சேர்ந்து தீ வைத்து கொளுத்தியதாக' தெரிவித்தார்.புகாரின் பேரில் அண்ணாமலைநகர் போலீசார் 14 பேர் மீது வழக்குப் பதிந்தனர்.

downlaod this page as pdf

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior