உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஏப்ரல் 08, 2010

ரேஷன் கடையை குடும்ப அட்டைஅடிப்படையில் பிரிக்க கோரிக்கை

 கிள்ளை: 

                பொதுமக்கள் நலன் கருதி கீழ் அனுவம்பட்டு ரேஷன் கடையை குடும்ப அட்டை அடிப்படையில் பிரிக்கவேண்டும் என ஊராட்சி தலைவர் அரசுக்கு கோரிக்கை வைத் துள்ளார்.
 
                        சிதம்பரம் அருகே கீழ் அனுவம்பட்டு ரேஷன் கடையில், கீழ் அனுவம் பட்டு, சாலக்கரை, வி.வி. எஸ்.நகர், நவாப்பேட்டை, காரைப்பாடி, அம்பு பூட்டியபாளையம், ரயிலடி, பனந்தோப்பு மற்றும் மேட்டுத்தெரு பகுதிகளை சேர்ந்த 792 கார்டுதாரர்கள் பயனடைந்து வருகின்றனர். அனைத்து கார்டுதாரர்களும் ஒரே கடையில் பொருட்கள் வாங்குவதால் கூட்ட நெரிசல் ஏற்படுகிறது. இதனால் ஒரு சிலர் பொருட்கள் வாங்க முடியாமல் போகிறது. இந்த நிலையை போக்க தனியாக ஒரு ரேஷன் கடை துவங்கி கார்டுதாரர்களை பிரித்து பொருட்கள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுகுறித்து பல முறை சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பொது மக்கள் சார்பில் கோரிக்கை வைத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே இப்பகுதியில் அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஊராட்சி தலைவர் மனோகர் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.

downlaod this page as pdf

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior