உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஏப்ரல் 08, 2010

சாலை விபத்துகள் குறித்து போலீசார்சுவர் விளம்பரம்

 பரங்கிப்பேட்டை: 

                  சாலை விபத்துகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பரங்கிப்பேட்டை போலீசார் சுவர் விளம்பரம் எழுதியுள்ளனர். கடலூர் மாவட்டத்தில் சாலை விபத்துகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அந்தந்த பகுதி போலீஸ் நிலையத்திற்குட் பட்ட பகுதிகளில் டிஜிட் டல் பேனர் வைத்துள்ளனர். பரங்கிப்பேட்டை இன்ஸ்பெக்டர் புகழேந்தி, முக்கிய இடங்களில் டிஜிட்டல் பேனர்கள் மட்டுமின்றி சுவர் விளம்பரமும் எழுதியுள்ளார்.அதில் தர்மம் தலைகாக்கும், தக்க சமயத்தில் தலை கவசம் உயிர் காக்கும், சாலை விதிகளை நாம் மதிப்போம், விபத் தில்லா உலகை நாம் படைப்போம், அதிவேகம் முன்னே, ஆபத்து வரும் பின்னே, வாகனத்தை இரவல் கொடுக்கும்போதும், வாங்கும்போதும் வாகனம் ஓட்டுவதற்கு தகுதியானவாரா என தெரிந்து கொள்ள வேண்டும் என் பது உள்ளிட்ட வாசகங்கள் எழுதப்பட்டுள்ளது.

downlaod this page as pdf

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior