உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஏப்ரல் 08, 2010

தி.மு.க., பிரமுகர் வீட்டில் கொள்ளை திருவள்ளூர் வாலிபர் கோர்ட்டில் ஆஜர்


கடலூர்: 

                      தி.மு.க., பிரமுகர் வீட்டில் கத்தியைக் காட்டி மிரட்டி 5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகை, பணத்தை கொள்ளையடித்த வழக்கில் திருவள்ளூரைச் சேர்ந்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
 
                      திருவள்ளூரைச் சேர்ந்த தட்சணாமூர்த்தி மகன் பேச்சியப்பன் (24). இவரை திருட்டு வழக்கு ஒன்றில் திருவள்ளுர் போலீசார் கைது செய்து விசாரித்தனர். அதில் கடலூர் மாவட்டம் நல்லாத்தூர் தி.மு.க., பிரமுகர் சுப்புராம் வீட்டில் கடந்த 13ம் தேதி திருமண அழைப்பிதழ் கொடுப்பது போல் வந்து ஐந்து லட்சம் ரூபாய் மதிப்புள்ள 20 சவரன் நகை ரொக்க பணத்தை கொள்ளையடித்த வழக்கில் சம்பந்தப்பட்டவர் என தெரியவந்தது. இதனையடுத்து திருவள்ளூர் போலீசார் தூக்கணாம்பாக்கம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். உடன் தூக்கணாம்பாக்கம் போலீசார் திருவள்ளூர் சென்று பேச்சியப்பனை கைது செய்து கடலூர் மாஜிஸ்திரேட் சுதா முன் ஆஜர்படுத்தினர். மேலும், பேச்சியப்பனை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க தூக்கணாம்பாக்கம் போலீசார் இன்று கோர்ட்டில் மனு தாக்கல் செய்கின்றனர்.

downlaod this page as pdf

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior