உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஏப்ரல் 08, 2010

போலீஸ் குடியிருப்பில் வீட்டைசுத்தமாக வைத்திருந்தவர்களுக்கு பரிசு


கடலூர்: 

                     கடலூர் புதுநகர் போலீஸ் குடியிருப்பில் வீட்டை சுந்தமாக வைத்திருப்பவர்களுக்கு இன்ஸ்பெக்டர் ஆரோக்கியராஜ் பரிசு வழங்கினார். கடலூர் மாவட்டத்தில் உள்ள போலீஸ் குடியிருப் புகளை ஆய்வு செய்து சுத்தமாக வைத்திருப்பவர் களுக்கு பரிசு வழங்க எஸ்.பி., அஷ்வின் கோட் னீஸ் அறிவுறுத்தினார்.அதனைத் தொடர்ந்து கடலூர் புதுநகர் போலீஸ் குடியிருப்பில் வீட்டை சுத்தமாக வைத்திருக்கின்றனரா என பேராசிரியை ஜெயந்தி ரவிச்சந்திரன், இன்ஸ்பெக்டர் ஆரோக் கியராஜ், சப் இன்ஸ்பெக்டர்கள் துர்கா, சங்கீதா கடந்த வாரம் பார்வையிட்டு மூன்று குடும்பத்தினரை தேர்வு செய்தனர்.இதற்கான பரிசளிப்பு நிகழ்ச்சி புதுநகர் போலீஸ் ஸ்டேஷனில் நேற்று நடந் தது. இதில் ஏட்டுகள் கணேசன் மனைவி ஜோதி, ராமலிங்கம் மனைவி வேம்பு, ரவி மனைவி வாசவிக்கு இன்ஸ்பெக்டர் ஆரோக்கியராஜ் பரிசு வழங்கினார்.


downlaod this page as pdf

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior