உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஏப்ரல் 08, 2010

விதிகளை மீறி இரண்டு டிரெய்லர்களில் கரும்பு ஏற்றிச் செல்லும் டிராக்டர்களால் விபத்து அதிகரிப்பு

 பண்ருட்டி: 

                     பண்ருட்டியில் இரண்டு டிரெய்லர்களில் கரும்பு ஏற்றிச் செல்லும் டிராக்டர்களால் விபத்துக்களும் போக்குவரத்து பாதிப்பும் ஏற்படுகிறது. பண்ருட்டியை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து தினந்தோறும் நெல்லிக்குப்பம் இ.ஐ.டி., பாரி கம்பெனிக்கு கரும்பு டிராக்டர்கள் 100க்கும் மேற்பட்டவை செல்கின்றன. இதில் பல டிராக்டர்கள் விதிமுறைகளை மீறி நகரில் போக்குவரத்து மிகுந்த சாலையில் இரு டிரெய்லர்களில் கரும்பு ஏற்றி செல்கின்றனர். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன் விபத்துக்களும் ஏற்படுகிறது. பள்ளி செல்லும் மாணவ, மாணவிகள் மட்டுமின்றி பொதுமக்கள் வெகுவாக பாதிக்கப்படுகின்றனர். இரண்டு டிரெய்லர்கள் இணைத்து செல்லக்கூடாது என்பதை டிரைவர்கள்தான் மறந்தார்கள் என்றால் போக்குவரத்து போலீசாரும் கண்டு கொள்ளாமல் இருக்கின்றனர்.காலை மற்றும் மாலை வேளைகளில் போக்குவரத்து 'பிசி'யான நேரங்களில் கரும்பு ஏற்றி செல்லும் டிராக்டர்கள் மாற்றுப் பாதையில் செல்லவும், இரண்டு டிரெய்லர்கள் ஏற்றிச் செல்லும் டிராக்டர் டிரைவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

downlaod this page as pdf

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior