உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஏப்ரல் 08, 2010

மத்திய, மாநில அரசுகள் ஒருங்கிணைந்துசெயல்படுகின்றன: எம்.பி., அழகிரி


சிறுபாக்கம்: 

                      இலவச கலர் 'டிவி' வழங் கும் விழா வேப்பூர் அடுத்த நகர் ஊராட்சியில் நடந்தது.ஊராட்சி தலைவர் பெரியசாமி தலைமை தாங்கினார். நல்லூர் சேர்மன் ஜெயசித்ரா, வேளாண்குழு தலைவர் பாவாடை, கோவிந்தசாமி முன்னிலை வகித்தனர். தாசில்தார் ஜெயராமன் வரவேற்றார். சிறப்பு விருந்தினர்கள் எம்.பி., அழகிரி, கலெக்டர் சீத்தாராமன் 912 பயனாளிகளுக்கு இலவச 'டிவி' வழங்கினர்.

                      விருத்தாசலம் ஆர்.டி. ஓ., முருகேசன், ஆணையர் கள் ரவிசங்கர்நாத், சுலோச் சனா, வேளாண் குழு தலைவர் ராமு, ஒன்றிய தி.மு.க., துணை செயலாளர் கருப்புசாமி, ஊராட்சி தலைவர் அண்ணாதுரை, துணைத் தலைவர் செல்வராசு, காங்., நிர்வாகிகள் இளையராஜா, ஜெயராமன், மாவட்ட கவுன்சிலர் தங்கதுரை, ஒன்றிய கவுன்சிலர் சக்திவிநாயகம் ஆகியோர் பங்கேற்றனர். 

விழாவில் எம்.பி., அழகிரி பேசுகையில் 

                        'உலக நடப்புகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள குடிசையில் வாழும் ஏழைகள் கூட பயன்பெறும் திட்டங்களை செயல்படுத்தி வருபவர் முதல்வர் கருணாநிதி. மத்திய, மாநில அரசுகள் ஒருங்கிணைந்து திட்டப்பணிகளை செயல்படுத்தி வருகின்றன. ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் சோனியாகாந்தி ஆண்டுக்கு 50 ஆயிரம் கோடி மதிப்பில் மண் சார்ந்த வேலைக்கு செலவிட்டு வருகிறார்' என பேசினார்.

downlaod this page as pdf

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior