உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஏப்ரல் 08, 2010

தீயணைப்பு மற்றும் பேரிடர் தடுப்புமேலாண்மை பயிற்சி செயல் விளக்கம்


சேத்தியாத்தோப்பு: 

                கல்லூரி மாணவர்களுக் கான குடிமை பயிற்சி முகாமில் தீயணைப்பு மற்றும் பேரிடர் தடுப்பு மேலாண்மை பயிற்சி, செயல்முறை விளக்கும் அளிக்கப்பட்டது.
 
                      ஸ்ரீமுஷ்ணம் சி.எஸ்., ஜெயின் கல்வியியல் கல்லூரி மாணவர்களுக் கான குடிமை பயிற்சி முகாம் எருமனூர் கிராமத்தில் நடக்கிறது. இம்முகாமிற்கு மகாவீர்சந்த் தலைமை தாங்கினார். கல்வியியல் கல்லூரி முதல்வர் ராஜதுரை முன்னிலை வகித் தார். விரிவுரையாளர் இதயவேந்தன் வரவேற்றார். கல்விக்குழு தலைவர் சந் தோஷ் சந்த் ஜெயின் முகாமை துவக்கி வைத்தார்.

                  சி.எஸ்., ஜெயின் பார் மஸி கல்லூரி முதல்வர் அபிராமி சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். தீயணைப்பு அலுவலர்கள் விருத்தாசலம் பழனிவேல், குறிஞ்சிப்பாடி குமார், வேப்பூர் ஆறுமுகம் மற்றும் 25 தீயணைப்பு வீரர்கள் தீ தடுப்பு மற்றும் பேரிடர் தடுப்பு மேலாண்மை குறித்து செயல்முறை விளக்கம் அளித்தனர்.தொடர் நிகழ்ச்சியாக விருத்தாசலம் விருத்தகீரிஸ்வரர் கோவிலில் மாணவர்கள் உழவாரப் பணியில் ஈடுபட்டனர். விரிவுரையாளர் இந்திராகாந்தி நன்றி கூறினார்.

downlaod this page as pdf

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior