உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஏப்ரல் 08, 2010

நெய்வேலிக்கு ஜெ., வருகைகடலூரில் இன்று ஆலோசனை

 கடலூர்: 

                 நெய்வேலிக்கு வரும் 18ம் தேதி வருகை தரும் அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெ.,வை வரவேற்பது தொடர்பாக ஆலோசனைக் கூட்டம், கடலூரில் இன்று நடக்கிறது.
 
                 அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா கடந்த வாரம் மாநில நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது, மாநிலத்தில் ஏற்கனவே அமைக்கப்பட்டு திறக்கப்படாமல் உள்ள எம்.ஜி.ஆர்., சிலைகளை திறக்க, நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

                   அதன்படி, கடலூர் மாவட்டம் நெய்வேலி டவுன்ஷிப் 9ம் வட்டம், 'வாட்டர் டேங்க்' அருகே, 1992ம் ஆண்டில் நிறுவி திறக்கப்படாமல் உள்ள எம.ஜி.ஆர்., சிலையை, வரும் 18ம் தேதி திறக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கட்சியின் பொதுச் செயலர் ஜெ., எம்.ஜி.ஆர்., சிலையை திறந்து வைத்து பொதுக்கூட்டத்தில் பேச உள்ளார். சிலை திறப்பு விழாவிற்கு வருகை தரும் ஜெ.,வை வரவேற்பது குறித்து, மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டம், கடலூர் மஞ்சக்குப்பத்தில் உள்ள கே.எஸ்.ஆர்., திருமண மண்டபத்தில், இன்று மாலை 4 மணிக்கு நடக்கிறது. கட்சியின் மாநில பொருளாளர் பன்னீர்செல்வம், தலைமை நிலைய செயலர் செங்கோட்டையன், கொள்கை பரப்பு செயலர் தம்பிதுரை, அமைப்பு செயலர் செம்மலை ஆகியோர், மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துகின்றனர்.

downlaod this page as pdf

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior