உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஏப்ரல் 08, 2010

போலீஸ் ஏட்டுக்கு கொலை மிரட்டல்கம்ப்யூட்டர் சென்டர் உரிமையாளர் கைது


கடலூர்: 

                             கோர்ட் சம்மனை கொடுக்க சென்ற போலீஸ் ஏட்டுவை நெட்டித் தள்ளி கொலை மிரட்டல் விடுத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். கடலூர் புதுப்பாளையம் புதுத் தெருவைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் செல்வக்குமார் (32). இவர் கடலூர் மஞ்சக்குப்பத்தில் கம்ப்யூட்டர் சென்டர் நடத்தி வருகிறார். கடந்த 2008ம் ஆண்டு ஏற்பட்ட தகராறில் செல்வக்குமார் மீது வழக்கு உள்ளது.

                           இந்த வழக்கில் செல்வக்குமார் கொடுத்த புகார் மனு விசாரணையில் தள்ளுபடி செய்யப்பட்டது. இது குறித்து செல்வக்குமாரின் கருத்தை அறிய அவருக்கு கடலூர் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜராக உத்தரவிட்டு சம்மன் அனுப்பியது. கடலூர் புதுநகர் போலீஸ் ஏட்டு நடராஜன் சம்மனை செல்வகுமாரிடம் வழங்க நேற்று காலை அவரது வீட்டிற்கு சென்றார்.அப்போது வீட்டில் செல்வக்குமாரும் அவரது தாயார் அழகம்மாளும் (54) இருந்தனர். ஏட்டு நடராஜன் சம்மனை செல்வக்குமாரிடம் கொடுத்த போது ஆத்திரமடைந்த செல்வக்குமார், அழகம்மாள் இருவரும் ஏட்டு நடராஜனை சரமாரியாக திட்டி, கொலை செய்து விடுவதாக மிரட்டி நெட்டித்தள்ளினர்.இது குறித்து ஏட்டு நடராஜன் கொடுத்த புகாரின் பேரில் கடலூர் புதுநகர் இன்ஸ்பெக்டர் ஆரோக்கிராஜ், சப் இன்ஸ்பெக்டர்கள் துர்கா, சங்கீதா மற்றும் போலீசார் செல்வக்குமாரை கைது செய்து அழகம்மாளை தேடி வருகின்றனர்.


downlaod this page as pdf

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior