உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஏப்ரல் 08, 2010

எஸ்.எஸ்.எல்.சி., மெட்ரிக் தேர்வு'பிட்' அடித்த 8 பேர் சிக்கினர்

 கடலூர்: 

                    எஸ்.எஸ்.எல்.சி., சமூக அறிவியல் மற்றும் மெட்ரிக் பொதுத் தேர்வில் 'பிட்' அடித்த 8 மாணவர்கள் பிடிபட்டனர்.எஸ்.எஸ்.எல்.சி., மற்றும் மெட்ரிக் பிரிவிற் கான பொதுத் தேர்வு கடந்த 23ம் தேதி துவங்கியது. தேர்வில் முறை கேடுகளை தவிர்க்க பறக்கும் படையினர் தீவிரமாக கண்காணித்து வருகின் றனர்.

                     நேற்று எஸ்.எஸ். எல்.சி., பிரிவிற்கு இறுதி தேர்வாக சமூக அறிவியலும், மெட்ரிக் பிரிவிற்கு வரலாறு மற்றும் குடிமை யியல் பாடத் தேர்வும் நடந்தது.தேர்வு மையங்களை சி.இ.ஓ., மற்றும் டி.இ. ஓ.,க்கள் தலைமையிலான பறக்கும் படையி னர் சோதனை நடத்தினர். அதில் விருத்தாசலம் பாத்திமா மெட்ரிக் பள்ளி மையத்தில் தேர்வு எழுதிய அதே பள்ளி மாணவர்கள் இருவரும், காட்டுமன்னார்கோவில் அரசு பெண்கள் பள்ளியில் 6 தனித்தேர்வர்களும் 'பிட்' அடித்தபோது கையும் களவுமாக பிடித்து வெளியேற்றப்பட்டனர்.இவர்களின் விடைத் தாள்கள் அரசு மண்டல தேர்வுகள் துணை இயக் குனர் அலுவலகத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர்.

downlaod this page as pdf

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior