உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், ஏப்ரல் 19, 2010

பரிவிளாகம் கிராமத்தில் 21ம் தேதி மனுநீதி நாள் முகாம்

 கடலூர் : 

               காட்டுமன்னார்கோவில் அடுத்த பரிவிளாகம் கிராமத்தில்  மாவட்ட வருவாய் அலுவலர் வரும் 21ம் தேதி பொது மக்கள் குறை கேட்கிறார். காட்டுமன்னார்கோவில் வட்டம், பரிவிளாகம் கிராமத்தில் வரும் 21ம் தேதி மனுநீதி நாள் முகாம் நடக்கிறது. இம்முகாம் தொடர்பாக வி.ஏ.ஓ., அலுவலகத்தின் முன்பாக பொது மக்களிடமிருந்து மனுக்கள் பெற பெட்டி வைக்கப்படும். மனு கொடுக்க விரும்பும் பொதுமக்கள் நேரில் வந்து மனுக்களை பெட்டியில் போடலாம்.   மேலும் அன்று காலை 10 மணியளவில் வருவாய்த்துறை மற்றும் இதர துறை அலுவலர்கள் நேரில் பொது மக்களிடமிருந்து மனுக்களை பெற உள்ளனர்.
 
                   இவ்வாறு பெறப்படும் மனுக்களின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு நடவடிக்கையின் விபரம் மற்றும் கோரிக்கைக்களுக்கான பதிலை மனுநீதி நாளன்று தெரிவிக்கப்படும். மேலும் மனுநீதி நாளன்று பொது மக்கள் பயன்பெறும் வகையில் மருத்துவ முகாம், விவசாய திட்டங்களின் செயலாக்கம், ஊட்டச்சத்து மற்றும் சிறு சேமிப்பு ஆகிய துறைகளின் கண்காட்சி மற்றும் செயல் விளக்கங்களை சம்மந்தப்பட்ட துறையினர் செய்து காண்பிக்கவுள்ளனர்.

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior