உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், ஏப்ரல் 19, 2010

போலீசாரை கண்டித்து போராட்டம் பா.ம.க., மாவட்ட செயற்குழுவில் தீர்மானம்

 குறிஞ்சிப்பாடி : 

                           பா.ம.க., மாவட்ட செயற்குழு கூட்டம் வடலூரில் நடந்தது. மாவட்ட செயலாளர் தர்மலிங்கம் தலைமை தாங்கினார். மாவட்ட வன்னியர் சங்கத் தலைவர் ஆறுமுகம், ஒன்றிய செயலாளர் மோகன், விஜயகாந்தி, தட்சணாமூர்த்தி, முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் குமரவேல் வரவேற்றார்.  மாநில வன்னியர் சங்க துணைத் தலைவர் திருமால்வளவன் பேசினார். பண்ருட்டி ஒன்றிய செயலாளர் சிவக்குமார், நகர செயலாளர்கள் சக்கரவர்த்தி, செல்வம், மாவட்ட இளைஞரணி செயலாளர் குமார், ஒன்றிய தலைவர் எழிலரசி ரவிச்சந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில், வரும் 28ம் தேதி மகாபலிபுரத்தில் வன்னியர் இளைஞர் சங்கம் நடத்தும் சித்திரா பவுர்ணமி விழாவில் கலந்து கொள்வது. வழிசோதனைபாளையத்தில் நடந்த கலவரத்தில் மோட்டார் கொட்டகைகளுக்கு தீ வைத்து கொளுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்காத போலீசாரை கண்டித்து போராட்டம் நடத்துவது. குறிஞ்சிப்பாடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பணிபுரியும் அதிகாரிகள் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக செயல்படுவதை மாற்றிக் கொள்ளாவிட்டால் அதை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்துவது உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

downlaod this page as pdf

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior