உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், ஏப்ரல் 19, 2010

விருத்தாசலம் கல்லூரி நகர் வடக்கு பகுதியில் சாலை மற்றும் பூங்காவில் தனி நபர்கள் ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி மனு


விருத்தாசலம் :  

          விருத்தாசலம் கல்லூரி நகர் வடக்கு பகுதியில் சாலை மற்றும் பூங்காவில் தனிநபர் ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் ஆர்.டி.ஓ., விடம் மனு கொடுத்தனர்.
 
இதுகுறித்து கல்லூரி நகர் வடக்கு பகுதி பொதுமக்கள் சார்பில் ஆர்.டி.ஓ., முருகேசனிடம் அளிக்கப் பட்ட மனு: 

             விருத்தாசலம் கொளஞ் சியப்பர் அரசு கல்லூரி அருகில் கல்லூரி நகர் உள்ளது. நகரின் வடக்கு பகுதியில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு 30 அடி சாலையும், அருகிலேயே பூங்காவிற்கு 10 சென்ட் இடமும் ஒதுக்கப்பட்டது. இந்த சாலை வழியை அடைத்து தனி நபர் ஒருவர் கொட்டகை அமைத்து ஆக் கிரமிப்பு செய்துள் ளார். அதுபோல் அருகில் உள்ள பூங்காவிற்கான இடத்தை சுற்றி கம்பி வேலி போட்டு  மற்றொருவர் ஆக்கிரமிப்பு செய்து வருகிறார். நாங்கள் கல்லூரிக்கு சொந்தமான இடத்தின் வழியேதான் எங்கள் பகுதிக்கு சென்று வருகிறோம். எனவே எங்கள் பகுதிக்கு செல்லும் சாலையில் உள்ள ஆக்கிரமிப்பையும், சிறுவர்கள் விளையாடும் பூங்காவின் ஆக்கிரமிப்பையும் அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

downlaod this page as pdf

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior