உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், ஏப்ரல் 19, 2010

ஆர்.டி.ஓ., அலுவலகம் முற்றுகை : புதிய தமிழகம் கட்சி முடிவு

 கடலூர் : 

              ஆதி திராவிட மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகையை தாமதமின்றி வழங்க வேண்டும் என புதிய தமிழகம் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
 
                 புதிய தமிழகம் கட்சியின் மாவட்ட செயற்குழு கூட்டம் கடலூரில் நடந்தது. மாவட்ட செயலாளர் அமுதன் தலைமை தாங்கினார். தமிழர் சேனை மாவட்ட செயலாளர் பாஷா முன்னிலை வகித்தார். மாணவரணி மாவட்ட செயலாளர் வெற்றிவேலன் வரவேற்றார். நிர்வாகிகள் சுகுமார், மைனர், சதாசிவம், சுதாகர், தேவேந்திரன், வீரபாண்டி, பிரகாஷ், சிவக் கொழுந்து உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 
                       கூட்டத்தில், விபத்து ஏற்படுத்தும் டிரைவர்களின் உரிமத்தை ரத்து செய்வது என்ற உத்தரவை தமிழக அரசு திரும் பப் பெற வேண்டும். ஆதிதிராவிட மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகையை தாமதமின்றி வழங்க வேண்டும். கடலூர் தபால் நிலையம் அருகே உள்ள அம்பேத்கர் சிலையை சுற்றி மதில் சுவர் கட்டி, பூங்கா அமைக்காததைக் கண் டித்து கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி தலைமையில் மே மாதம் 22ம் தேதி ஆர்.டி.ஓ., அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்துவது என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.

downlaod this page as pdf

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior