உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், ஏப்ரல் 19, 2010

ஆதிமூலேஸ்வரர் மூலவர் மீது சூரிய ஒளி படும் அற்புத நிகழ்வு

 பரங்கிப்பேட்டை : 

              சிதம்பரம் அருகே ஆதிமூலேஸ்வரர் கோவிலில் மூலவர் மீது சூரிய ஒளி விழும் அற்புத நிகழ்வை ஏராளமான பக்தர்கள் கண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
 
              சிதம்பரம் அடுத்த அகரம் மண்டப தெருவில் புகழ்பெற்ற ஆதிமூலேஸ்வரர் கோவில் உள்ளது. ஒவ்வொரு மாதமும் அமாவாசை, பவுர்ணமி நாட்களில் சிறப்பு அபிஷேகம், வழிபாடுகள் நடந்து வருகிறது. சித்திரை மாதம் முதல் வாரத்தில் ஆதிமூலேஸ்வரர் மூலவர் மீது கோபுரம் வழியாக சூரிய ஒளி விழும் அற்புத நிகழ்வு நடந்து வருகிறது. இந்த ஆண்டு சித்திரை 1ம் தேதியில் இருந்து 7ம் தேதி வரை ஆதிமூலேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம், சிறப்பு வழிப்பாடு, ஆராதனை நடத்தப்பட்டு வருகிறது. கடந்த சித்திரை 1ம் தேதியில் இருந்து கோவில் எதிரே உள்ள கோபுரம் வழியாக சூரிய ஒளி மூலவர் மீது லேசாக பட்டு வந்தது. நேற்று சூரிய ஒளி மூலவர் மீது முழுவதும் விழுந்து அற்புத நிகழ்வு நடந்தது. இந்த நிகழ்வை சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

downlaod this page as pdf

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior