உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், ஏப்ரல் 19, 2010

விநாயகர் சிலை மாயம் கடலூரில் பரபரப்பு

கடலூர் : 

               கடலூர் நத்தவெளி ரோடு கங்கையம்மன் கோவிலில் இருந்த விநாயகர் சிலை காணாமல் போனதால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.
 
                 திருப்பாதிரிப்புலியூர், நத்தவெளி ரோட்டில் கங் கையம்மன் கோவில் உள்ளது. இந்தக் கோவிலில் இரண்டரை அடி உயரமுள்ள முருகர், விநாயகர் சிலை வைத்து அப்பகுதி மக்கள் பூஜை செய்து வந்தனர். நேற்று முன்தினம் இரவு பூஜை முடிந்து பூசாரி சரவணன் வீட்டுக்கு சென்றுள்ளார். நேற்று அதிகாலை 4 மணிக்கு பூஜை செய்வதற்காக பார்த்தபோது விநாயகர் சிலை காணாதது கண்டு திடுக்கிட்டார். காணாமல் போனது கல் சிலையாக இருப்பதால் புதியதாக கோவில் கட்டியுள்ளவர்கள் வழிபடுவதற்காக எடுத்துச் சென்றிருக்கலாம் என கூறப்படுகிறது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


downlaod this page as pdf

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior