உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், ஏப்ரல் 19, 2010

விருத்தாசலம், சிதம்பரத்தில் மின் தடை நேரம் மாற்றம்


விருத்தாசலம் : 

          விருத்தாசலம் பஸ் நிலையப் பகுதியில் இன்று முதல் மின் நிறுத்த நேரம் மாற்றி அமைக் கப்பட்டுள்ளது.
இதுகுறித்து விருத்தாசலம் செயற் பொறியாளர் சிவராஜ் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: 

                விருத்தாசலம் நகர எல் லைக்குட்பட்ட வயலூர், புதுக்குப்பம், காலேஜ் ரோடு, சரோஜினி நகர், பஸ் நிலையம், ஜங்ஷன் ரோடு, புதுப்பேட்டை, பூதாமூர், சிதம்பரம் ரோடு, கடை வீதி, சேலம் ரோடு, மணலூர், காந்தி நகர், கம்பர் தெரு, பெண்ணாடம் ரோடு, பூந்தோட்டம் ஆகிய பகுதிகளுக்கான மின் தடை நேரம் இன்று (19 ம் தேதி) முதல் மாலை 3 மணியில் இருந்து 6 மணி வரை மாற்றப்பட்டுள்ளது.
சிதம்பரம்: 

                   சிதம்பரம் மற்றும் பு.முட்லூர் துணை மின் நிலையங்களில் இருந்து மின்சாரம் பெறும் பகுதிகளான சிதம்பரம் நகரம், அம்மாபேட்டை, மணலூர், அண்ணாமலை நகர், மாரியப்பா நகர்  புவனகிரி, கீரப்பாளையம், பரங்கிப்பேட்டை அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இன்று (19ம் தேதி) முதல் காலை 9மணியில் இருந்து 12 வரையிலும்,  காட்டுமன்னார்கோவில், ஸ்ரீமுஷ்ணம் துணை மின் நிலையங்களில் இருந்து மின்சாரம் பெறும் காட்டுமன்னார்கோவில் நகரம், லால்பேட்டை மற்றும் சுற்றியுள்ள பகுதிகள், ஸ்ரீமுஷ்ணம் நகரம் மற்றும் சுற்றுப்பகுதியில் மதியம் 12 மணி முதல் 3 மணிவரையிலும், சேத்தியாத்தோப்பு நகரம் மற்றும் அதனை சுற் றியுள்ள பகுதியில் மாலை 3 மணி முதல் 6 மணி வரையும் மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

downlaod this page as pdf

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior