உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், ஏப்ரல் 19, 2010

கால்நடை சிகிச்சை முகாம்


சிறுபாக்கம் : 

             சிறுபாக்கத்தில் அரசு கால்நடை நீர் நில வளத் திட்டத்தின் கீழ் கால் நடைகளுக்கு மலட்டு நீக்க சிகிச்சை முகாம் நடந்தது.
 
                 கால்நடை உதவி இயக்குனர் டாக்டர் லட்சுமணன் தலைமை தாங்கினார். ஊராட்சி துணைத் தலைவர் கணேசன் முன்னிலை வகித்தார். ஊராட்சி தலைவர் செந்தாமரை கண்ணன் முகாமை துவக்கி வைத்தார்.  கால்நடை உதவி மருத்துவர்கள் ஒரங்கூர் கார்த்திகேயன், மங்களூர் சுப்ரமணியன், நல்லூர் தில்லை கோவிந்தன், வேப்பூர் கண்மணி உள்ளிட்டோர் சிகிச்சை அளித் தனர். தொடர்ந்து கிடாரி கன்றுகளை சிறப்பாக பராமரித்து வந்த 8 விவசாயிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

download this page as pdf

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior