உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, நவம்பர் 21, 2009

ரூ.35 லட்சம் பொருள்கள் பறிமுதல்: 6 பேர் கைது

சிதம் ​ப​ரம்,​ நவ. 20:​

தமிழ்நாட்டில் வழிப்பறி மற்றும் திருட்டு குற்றங்களில் ஈடுபட்ட 6 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து ரூ.35 லட்சம் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்ன. ​ ​ சிதம்​ப​ரத்தை அடுத்த பரங்​கிப்​பேட்டை காவல் நிலை​யத்​தில் திரு​டு​போன பொருள்​களை உரி​ய​வர்​க​ளி​டம் ஒப்​ப​டைக்​கும் நிகழ்ச்சி வெள்​ளிக்​கி​ழமை நடை​பெற்​றது. இதில் விழுப்​பு​ரம் சரக டிஐஜி மாசா​ன​முத்து,​ கட​லூர் எஸ்.பி. அஸ்​வின் கோட்​னீஷ் ஆகி​யோர் உரி​ய​வர்​க​ளி​டம் பொருள்​களை ஒப்​ப​டைத்​த​னர். இந்​நி​கழ்ச்​சி​யில் சிதம்​ப​ரம் டிஎஸ்பி மா.மூவேந்​தன் உள்​ளிட்​டோர் பங்​கேற்​ற​னர்.​ ​ இது​கு​றித்து டிஐஜி மாசா​ன​முத்து நிரு​பர்​க​ளி​டையே தெரி​வித்​தது:​ கட​லூர் மாவட்​டத்​தில் தொடர்ந்து நடந்து வந்த திருட்டு,​ கொள்ளை,​ வாக​னத் திருட்டு ஆகிய குற்​றங்​களை கண்​டு​பி​டிக்க சிதம்​ப​ரம் டிஎஸ்பி மா.மூவேந்​தன் தலை​மை​யின் கீழ் பரங்​கிப்​பேட்டை காவல் நிலைய ஆய்​வா​ளர் புக​ழேந்தி மற்​றும் டெல்டா பிரிவு தனிப்​படை சப்-​இன்ஸ்​பெக்​டர் அமீர் ஆகி​யோர் கொண்ட தனிப்​படை போலீ​ஸôர் ஈடு​ப​டுத்​தப்​பட்​டுள்​ள​னர்.​ ​ இந்​நி​லை​யில் சிதம்​ப​ரத்தை அடுத்த பி.முட்​லூர் மெயின்​ரோட்​டில் தனிப்​படை போலீ​ஸôர் வியா​ழக்​கி​ழமை வாக​னத் தணிக்​கை​யில் ஈடு​பட்​டி​ருந்​த​னர். அப்​போது சிதம்​ப​ரம் நோக்கி வந்த காரை நிறுத்தி அதில் வந்த வட​லூ​ரைச் சேர்ந்த சிங்​கா​ர​வேலு ​(34), கும்​ப​கோ​ணம் மேல​கா​வே​ரி​யைச் சேர்ந்த சகா​பு​தீன் ​(39) ஆகி​யோரை சந்​தே​கத்​தின்​பே​ரில் கைது செய்து விசா​ரித்​த​தில் பல்​வேறு இடங்​க​ளில் வீடு புகுந்து திரு​டி​யது தெரி​ய​வந்​தது. மேலும் அவர்​கள் அளித்த தகவ​லின்​பே​ரில் அவ​ரது கூட்​டா​ளி​கள் கட​லூ​ரைச் சேர்ந்த அருள்​பாண்​டி​யன் ​(21), காட்​டு​மன்​னார்​கோ​வில் தெம்​மூ​ரைச் சேர்ந்த ஜெய்​சங்​கர் ​(39), நெய்வேலி வடக்​குத்​தைச் சேர்ந்த ரமேஷ் ​(23), மதுரை கிடா​ரி​கு​ளத்​தைச் சேர்ந்த பிர​பா​க​ரன் ​(31) ஆகி​யோர் கைது செய்​யப்​பட்​ட​னர். ​ ​ இக்​கும்ப​லின் தலை​வ​னாக செயல்​பட்ட கேரள மாநி​லம் திரு​வ​னந்​த​பு​ரத்​தைச் சேர்ந்த கணேஷ்​கு​மார் உளுந்​தூர்​பேட்​டை​யில் டிப்​பர் லாரி திரு​டப்​பட்ட வழக்​கில் கட​லூர் மத்​திய சிறைச்​சா​லை​யில் உள்​ளார். பல்​வேறு மாவட்​டங்​க​ளைச் சேர்ந்த மேற்​கண்ட 9 பேர் கொண்ட கும்​பல் கட​லூர் மத்​திய சிறைச்​சா​லை​யில் இருந்த போது ஒன்று சேர்ந்து தமி​ழ​கத்​தில் கட​லூர்,​ விழுப்​பு​ரம்,​ திருச்சி,​ நாகை மாவட்​டங்​க​ளில் பல்​வேறு திருட்டு சம்​ப​வங்​க​ளில் ஈடு​பட்​டது விசா​ர​ணை​யில் தெரி​ய​வந்​தது. ​ பின்​னர் அவர்​க​ளி​ட​மி​ருந்து திருச்சி,​ தஞ்சை,​ நாகை,​ விழுப்​பு​ரம்,​ கட​லூர் ஆகிய மாவட்​டங்​க​ளில் பல்​வேறு இடங்​க​ளில் திரு​டிய வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதன் மதிப்பு ரூ.35 லட்சம்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior