உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, நவம்பர் 21, 2009

பெண் தற்​கொலை​: 5 போலீஸôர் நீதி​மன்​றத்​தில் ஆஜ​ராக உத்​த​ரவு

கட​லூர்,​ நவ. 20:​

கண​வரை மது​வி​லக்​குப் போலீ​ஸôர் கைது செய்​த​தால் மனம் உடைந்து மனைவி தற்​கொலை செய்து கொண்ட சம்​ப​வம் தொடர்​பாக,​ 5 போலீஸ் காவ​லர்​களை நீதி​மன்​றத்​தில் ஆஜ​ராக வேண்​டும் என்று நீதி​பதி வெள்​ளிக்​கி​ழமை உத்​த​ர​விட்​டார். ​​ ​ சிதம்​ப​ரத்தை அடுத்த நஞ்​சை​ம​கத்து வாழ்க்கை என்ற கிரா​மத்​தைச் சேர்ந்​த​வர் கூலித் தொழி​லாளி சண்​மு​கம். அவ​ரது மனைவி சாந்தி. கடந்த 30-4-2004 அன்று சண்​மு​கத்தை சிதம்​ப​ரம் மது​வி​லக்​குப் போலீ​ஸர் சாரா​யம் விற்​ற​தா​கக் கைது செய்ய முயன்​ற​னர். அவர் வீட்​டில் இல்​லா​த​தால் மனைவி சாந்​தி​யைப் பிடித்​துச் சென்​ற​னர். இதற்கு அப்​ப​குதி மக்​கள் கடும் எதிர்ப்பு தெரி​வித்​த​னர்.​ ​ இந்த நிலை​யில் சாந்​தி​யி​டம் போலீ​ஸôர் பணம் வாங்​கிக் கொண்டு அவரை விட்​டு​விட்​ட​தா​கக் கூறப்​ப​டு​கி​றது. மறு​நாள் சண்​மு​கம் மது​வி​லக்​குப் போலீ​ஸô​ரி​டம் சரண் அடைந்​தார். அவ​ரைப் போலீ​ஸôர் கைது செய்​த​னர். இத​னால் மனம் உடைந்த சாந்தி,​ தூக்​கிட்​டுத் தற்​கொலை செய்து கொண்​டார். இச்​சம்​ப​வம் குறித்து ஊர் மக்​கள் கிளர்ந்து எழுந்​த​தன் கார​ண​மாக,​ சிதம்​ப​ரம் சார் ஆட்​சி​ய​ராக இருந்த ராஜேந்​திர ரத்னு விசா​ரணை நடத்தி அர​சுக்கு அறிக்கை அனுப்​பி​னார்.​ ​ இச்​சம்​ப​வம் தொடர்​பாக சம்​பந்​தப்​பட்ட போலீஸ் காவ​லர்​கள் மீது வழக்​குப் பதிவு செய்து விசா​ரணை நடத்த,​ தமி​ழக அரசு அண்​மை​யில் உத்​த​ர​விட்டு உள்​ளது. இந்த வழக்கு கட​லூர் முதன்மை குற்​ற​வி​யல் நீதித்​துறை நடு​வர் நீதி​மன்​றத்​தில் தாக்​கல் செய்​யப்​பட்டு உள்​ளது. வழக்கு நீதி​பதி ஜாகீர்​உ​சேன் முன்​னி​லை​யில் வெள்​ளிக்​கி​ழமை விசா​ர​ணைக்கு வந்​தது.​ ​ குற்​றம் சாட்​டப்​பட்​டில் சம்​பந்​தப்​பட்ட போலீஸ் காவ​லர்​கள் நட​ரா​ஜன்,​ கலி​ய​மூர்த்தி,​ தன​பால்,​ பாஸ்​கர்,​ கணே​சன் ஆகிய 5 பேரை​யும் நீதி​மன்​றத்​தில் ஆஜ​ரா​கு​மாறு,​ நீதி​பதி ஜாகீர் உசேன் உத்​த​விட்​டார். வழக்கு விசா​ர​ணையை அடுத்த மாதம் 17ம் தேதிக்கு நீதி​பதி தள்ளி வைத்​தார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior