உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, நவம்பர் 21, 2009

காப்​பீடு திட்ட புகைப்​பட பணி:​ தேர்வு எழு​தும் மாண​வர்​கள் பாதிப்பு

பண்​ருட்டி,​ நவ. 19:

பண்​ருட்​டி​யில் உயிர் காக்​கும் உயர் சிகிச்சை காப்​பீட்​டுத் திட்​டத்​திற்​கான புகைப்​ப​டம் எடுக்​கும் பணி​யால் பள்​ளி​க​ளில் இடைப் பரு​வத் தேர்வு எழு​தும் மாண​வர்​கள் பாதிப்​ப​டைந்​துள்​ள​னர்.​ காப்​பீடு திட்​டத்​தில் சேர்​வ​தற்​கான புகைப்​ப​டம் மற்​றும் கைரேகை பதிவு செய்​யும் பணி பண்​ருட்டி நக​ரில் வியா​ழன் மற்​றும் வெள்​ளிக்​கி​ழமை நடை​பெ​று​கி​றது. இத் திட்​டத்​தில் சேர தகு​தி​யு​டைய பய​னா​ளி​கள் அவ​ர​வர் ​ வாக்கு செலுத்​தும் மையத்​தில் சென்று புகைப்​ப​டம் எடுத்​துக்​கொள்​ள​லாம் என அறி​வு​றுத்​தப்​ப​டி​ருந்​தது.​ பண்​ருட்டி நக​ரில் பள்​ளி​கள்,​ அலு​வ​ல​கங்​கள் என 37 மையங்​க​ளில் இப்​பணி நடை​பெற்​றது. இதில் பெரும்​பா​லான மையங்​கள் பள்​ளி​க​ளா​கும். தற்​போது மேல்​நிலை மற்​றும் உயர்​நி​லைப் பள்​ளி​யில் படிக்​கும் மாண​வர்​க​ளுக்கு இரண்​டாம் இடைப்​ப​ரு​வத் தேர்வு நடக்​கும் சம​யத்​தில்,​ புகைப்​பட பணி பள்ளி வளா​கத்​தில் நடை​பெற்​ற​தால் தேர்வு எழு​தும் மாண​வர்​க​ளி​டையே ​ ​ கவ​னச் சிதைவை ஏற்​ப​டுத்​தி​ய​து​டன்,​ போதிய இட​வ​சதி இல்​லா​த​தால் மாண​வர்​கள் வெளி​யில் அமர்ந்து தேர்வு எழு​தி​னர்.இதே​போல் நக​ராட்சி பள்​ளி​க​ளில் புகைப்​ப​டம் எடுக்​கும் பணி நடை​பெற்​ற​தால் இட​வ​சதி இன்றி அனைத்து மாண​வர்​க​ளும் ஒன்​றாக அமர்ந்து இருந்​த​னர். மேலும் மழை பெய்து ஒழு​கி​ய​தால் வகுப்​ப​றை​கள் நனைந்​துள்ள நிலை​யில் புகைப்​ப​டம் எடுக்​கும் பணிக்கு வகுப்​ப​றை​கள் ஒதுக்​கி​ய​தால் மாண​வர்​கள் அவதி அடைந்​த​னர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior