உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, நவம்பர் 21, 2009

தில்லி ஆர்​ப்பாட்​டத்​தில் ​ தமி​ழக கரும்பு விவ​சா​யி​கள் பங்​கேற்பு

​கட​லூர்,​ நவ. 19:

புது​தில்​லி​யில் வியா​ழக்​கி​ழமை நடை​பெற்ற கரும்பு விவ​சா​யி​கள் சங்க ​ ஆர்ப்​பாட்​டத்​தில் தமி​ழக விவ​சா​யி​கள் பங்​கேற்​ற​னர்.​ இத் தக​வலை இந்​திய விவ​சா​யி​கள் சங்​கங்​க​ளின் கூட்​ட​மைப்​பின் தமிழ்​மா​நில பொதுச் செய​லா​ளர் விருத்​த​கிரி தெரி​வித்​தார்.​ கரும்​புக்கு விலை நிர்​ண​யம் செய்ய,​ புதிய முறையை மத்​திய அரசு அறி​வித்​துள்​ளது. கரும்​புக்​கான நியா​ய​மான சன்​மான விலை என்ற பெய​ரில் அவ​ச​ரச் சட்​டத்தை மத்​திய அரசு அக்​டோ​பர் இறு​தி​யில் பிறப்​பித்து இருக்​கி​றது. இந்த அவ​ச​ரச் சட்​டத்​துக்கு நாடு முழு​வ​தும் உள்ள கரும்பு விவ​சா​யி​கள் பலத்த எதிர்ப்பு தெரி​வித்து வரு​கின்​ற​னர். ​இந்த அவ​ச​ரச் சட்​டத்​துக்கு எதிர்ப்பு தெரி​விக்​கும் வகை​யில் விவ​சாய சங்​கங்​கள் சார்​பிóல புது​தில்​லி​யில் புதன்​கி​ழமை ஆர்ப்​பாட்​டம் நடந்​தது. ​​ இந்​திய விவ​சா​யச் சங்​கங்​க​ளின் கூட்​ட​மைப்பு சார்​பில் அதன் தலை​வர் பச​வ​ராஜ் சம்​பகே தலை​மை​யில் நடந்த இந்த ஆர்ப்​பாட்​டத்​தில்,​ இந்த அமைப்​பின் தமி​ழக பொதுச் செய​லா​ளர் விருத்​த​கிரி,​ பொரு​ளா​ளர் தணி​காச்​ச​லம்,​ புதுவை மாநி​லச் செய​லா​ளர் சோம​சுந்​த​ரம் உள்​ளிட்ட 10 பேர் கலந்து கொண்​ட​தாக விருத்​த​கிரி தெரி​வித்​தார். ​ கூட்​ட​மைப்​பின் தலை​வர் பச​வ​ராஜ் சம்​பகே,​ இது​தொ​டர்​பாக குடி​ய​ர​சுத் தலை​வர் ​ பிர​திபா பாட்​டீலை சந்​தித்து அவ​ச​ரச் சட்​டத்​தைத் திரும்​பப் பெறு​மாறு வலி​யு​றுத்​தி​ய​தா​க​வும் அவர் கூறி​னார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior